காரைநகர் பிரதேச சபை தேர்தல் நல்லா சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

காரைநகர் பிரதேச சபை தேர்தல் நல்லா சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களில் பலர் தமது வட்டார மக்கள் தமக்கு ஏன் வாக்கு போட வேண்டும், தாம் வெற்றி பெற்று பிரதேச சபை உறுப்பினரானால் தனது வட்டாரத்திற்கும் மக்களிற்கும் என்ன வசதி வாய்ப்புக்களை செய்து கொடுப்பேன் என்றோ அல்லது தமது வட்டாரத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றோ அல்லது அதற்கான solution என்னவென்றோ சொல்லாமல்….. இன்னொரு கட்சியில், இன்னொரு வேட்பாளருக்கு வோட்டு போட வேண்டாம் என்று சொல்வதையே தமது தேர்தல் பிரச்சாரமாக செய்து வருகிறார்கள்.

சுப்பிரமணியம் வீதி வயல் காணிகளில் விளைச்சல் காலங்களில் கட்டாக்காலி ஆடு மாடுகளால் ஏற்படும் சேதம் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்டது, அதற்கான தீர்வை யாராவது முன்வைத்தார்களா..?

காரைநகர் சுற்று வீதியின் மேற்கு றோட் தற்காலிக புனரமைப்பின் போது பாரிய கிடங்குகள் மூடப்பட்டு திரு. கனேசபிள்ளை பாலச்சந்திரன் தலைமையிலும் கிழக்கு றோட் முன்னாள் தற்காலிக காரைநகர் அபிவிருத்தி சபை தலைவரான திரு. சபேசன் அவர்களது தலைமையிலும் நடைபெற்ற போதும்,

காரைநகர் இந்துக்கல்லூரி முன்னால் சயம்பு வீதி சந்தியிலும், நீலிப்பந்தனை, நடுத்தெரு வீதிகளில் பொருத்தப்பட்ட தெரு விளக்குகள் பழுதடைந்து பல்ப்புகள் காலாவதியான போது ஊர் அக்கறையுடன் கனடா கம்பனிகளையும் இலண்டன் கம்பனிகளையும் இன்னும் தமக்கு தெரிந்த கம்பனிகளையும் தொடர்பு கொண்டு அந்தந்த வட்டாரங்களை சொந்த இடமாக கொண்டவர்களை அணுகி தற்காலிகமாகவேனும் நிறைவேற்றவும்,

அவரவர் வட்டாரங்களிலேயே நல்லாக படிக்கிற ஒரு பாடசாலை பிள்ளை ஒருவர் ரியூசனுக்கு போகவோ அல்லது பல்கலைக்கழகத்துக்கு அனுமதி கிடைத்தும் போகமுடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் அதற்கு ஆவண செய்ய கனடா கம்பனிகளையும்,

காரைநகர் வைத்தியசாலையில் மருந்தெடுக்கும் பலருக்கும் வெறும் பழைய பேப்பரில் மருந்து குழுசைகளை மடித்து கொடுக்கிறார்கள். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகளையும் கொடுக்கிறார்கள். அதனை முதியவர்கள், விளக்கமற்றவர்கள் எதனை எப்போது என்று தெரியாமலும், கொடுக்கும் மருந்து மாத்திரைகளை கொட்டி தடவுவதாகவும் அதற்காக முறைப்படி வழங்கவும், எழுதிக்கொடுக்கவும் சிறிய envelop பெற்றுக்கொடுக்கவும்,

காரைநகரில் இன்று பலரும் சுண்ணாகத்தில் இருந்து பெளசர் மூலம் கொண்டுவரப்படும் குடிதண்ணீரை பணம் கொடுத்து வேண்டினாலும், இன்னமும் சிலர் காரைநகர் குடி தண்ணீர் கிணறுகளில் ஒன்றான மல்லிகை

கிணற்று தண்ணீரைத்தான் பெற்று வருகிறார்கள் என்றும் அதனால் மல்லிகை கிணறை அதற்குரிய காலங்களில் இறைத்து சுத்தப்படுத்த பிரதேச சபையால் முடியாது போனாலும் அதனை கனடா கம்பனிகளிடமும் வெளிநாட்டு கம்பனிகளிடமும் கேட்டு சுத்திகரித்து கொடுக்கவும்….

இது போன்ற சாதாரண பிரச்னைகள் ஒவ்வொரு வட்டாரங்களிலும் உண்டு. அதனை அடையாளம் கண்டு எத்தனை வேட்பாளர்கள் கடந்த காலங்களில் வெளிநாட்டு கம்பனிகளையாவது தொடர்பு கொண்டு தீர்த்து வைத்தார்கள். அல்லது இப்படியான வட்டார பிரச்சனைகளை தீர்த்து வைக்கத்தான் பிரதேச சபை அங்கத்தவராக தம்மை தெரிவு செய்ய வேண்டும் என கோருகிறார்கள்…?

அவர் புலிக்கு சார்பானவர்… இவர் புலிக்கு எதிரானவர்… இவர் தற்போதைய அநுர ஆட்சிக்கு எதிரானவர்… அவர் தற்போதைய அநுர ஆட்சிக்கு சார்பானவர்…

இவர் அன்று யானையில் கேட்டவர்… அவர் அன்று பூனையில் கேட்டவர்… அவர் அன்று சைக்கிளில் ஓடியவர்… இவர் இன்று வீட்டுக்குள்ளை நிற்கிறார்… என்பதெல்லாம் தான் அரசியல்.

நான் அரசியலுக்குள் இல்லை. எனக்கு தெரிந்தவரை காரைநகரில் மக்களிற்காக மக்களின் வசதிளை மேம்படுத்த பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட செயற்பாடுகளிற்கு பிரதேச சபையினால் நிறைவேற்ற முடியாத நிலையில் தனது சொந்த முயற்சியினாலும் அனுபவத்தினாலும் நம்பிக்கையினாலும் தமது சொந்த பணத்தினாலும் அல்லது கனடா கம்பனி அல்லது வெளிநாட்டு கம்பனிகளை தொடர்பு கொண்டு அவர்களது உதவிகளுடனும் நிறைவேற்றியவர்கள்.

அவர்களில் சிலர் என்னோடு நேரடியாக தொடர்பு கொண்டவர்கள். பிரதேச சபை உறுப்பினராக இல்லாத காலத்திலும் மக்கள் நலனில் அக்கறையோடு செயற்படுபவர்கள். அவர்களில் ஒரு சிலரைத்தான் நான் நம்பிக்கையோடு அவர்களிற்கு வாக்களியுங்கள், அவர்கள் இன்னும் உங்கள் வட்டார பிரச்சனைகளை பிரதேச சபை உறுப்பினராக பதவியேற்று துணிவுடன் செய்து முடிப்பார் என கூறுகின்றேன்.

உள்ளூராட்சி பிரதேச சபை தேர்தலில் கட்சிகளின் மேல் காதல் கொண்டவர்களால் தகுந்த வேட்பாளர்களை கூட கண்டு பிடிக்க முடியாத சூழ்நிலையில் யாரோ ஒருவரை நிறுத்தி தமது கட்சிக்காக வாக்கு கேட்கிறார்கள்.

நீங்கள் கட்சிக்காக வாக்கு போட போகிறீர்களா அல்லது உங்கள் வட்டாரத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைக்க கனடா கம்பனிகளையும், இலண்டன் கம்பனிகளையும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள கம்பனிகளையும் தொடர்பு கொண்டு உங்கள் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரச்சனைகளை பிரதேச சபையால் தீர்த்து வைக்க முடியாத பட்சத்தில் அவர்களால் தீர்த்து வைக்க முடியும் என நிரூபித்தவர்களிற்கு உங்கள் வோட்டுக்களை வழங்க போகிறீர்களா என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் நீங்கள் தான்.

இப்பவும் நான் சொல்கிறேன். நான் அரசியலில் இறங்கவில்லை. எனது ஊர் காரைநகரில் ஊர் மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்படுபவர்களிற்கும் கடந்த காலங்களில் கட்சிகள், ஆட்சிகள், சின்னங்களிற்கு அப்பாற்பட்டு பிரதேச சபையின் தமது வட்டாரங்களில் ஊரவர்களுடனும் அயலவர்களுடனும் தமது குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுடன் செயற்பட்டு கல்வியாளர்கள், முதியோர், பெண்கள், நண்பர்களென அனைவருடனும் மதிப்புடனும் மரியாதையுடனும் நாளாந்தம் இன்முகத்துடன் பழகுபவர்களிற்கு வாக்களியுங்கள்.

திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் தலைமையில் மான் சின்னத்தில் அமைந்துள்ள குழு அந்தந்த வட்டாரங்களில் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய குடும்ப உறுப்பினர்களும் அவர்களது சொந்த வீட்டின் அயலவர்களும் அவர்களிற்கே வாக்களிப்பார்கள். காரணம் அவர்கள் குடும்பத்திலும் அயலவர்களிடமும் நற்பெயர் பெற்றவர்கள். மனிதர்களை மனிதர்களாக மதிக்கத்தெரிந்தவர்கள்.

மேன்மை தங்கிய ஜனாதிபதி அநுர திசநாயக்காவும், பாராளுமன்றத்தில் அதிபெரும்பாண்மை பெற்று ஆட்சியமைக்க நீங்கள் வழங்கிய வாக்குகள் மூலம் நாட்டிற்கும் மாகாணங்களிற்கும் மாவட்டங்களிற்கும் நல்லதையும் தேவையானதையும் அந்த அரசும் ஆட்சியும் செய்யும் செய்யட்டும்.

ஆனால் இது எங்கள் பிரதேச சபை தேர்தல். எங்கள் வட்டார தேர்தல், எனது வீதியையும் எனது வீட்டையும் தெரிந்த ஒருவர் நேரடியாக எனக்கான வசதிகளை பெற்றுத் தருவார் என்கிற நம்பிக்கையோடு நீங்கள் வாக்களிக்க வேண்டிய தேர்தல்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் ஆலயத்தில் மாதாந்த நித்திய பூசைகள் 01.04.2025 இன்று முதல் கிரமமாக உபயகாரர்கள் உபயமாக நடைபெறும்

“பொன்னகவை அணி” என்றாலே 1973 இல் பிறந்து காரை இந்துவில் கல்வி கற்ற பழைய மாணவர்களே…! 23.01.2025 அன்று காரை இந்துவில் தேசிய மட்டத்தில் பரிசு பெற்றவர்களை கெளரவிக்கும் நிகழ்வில்…!

Leave a Reply