நாள் : Wednesday, September 16, 2026
--:--:--
👁️
Canada

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர் விஸ்தீரனமான ஒரு விவசாய பண்ணை வீட்டில் வசித்துவரும் காரை மண்ணின் மைந்தன் ‘முழக்கம் சிறி’ அவர்களின் பண்ணை வீட்டில் 20.06.2026 இன்று சனிக்கிழமை நடைபெற்ற ‘பறை திருவிழாவில்’ பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள்.

காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்ற நிகழ்வில் 3 மணிக்கு பின்னர் கலந்து கொண்ட போதிலும் பறை வாத்திய கருவி பற்றி பல விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

தமிழர்களின் முதல் வாத்திய கருவி ‘பறை’.

பிறப்பு முதல் இறப்பு வரை பிரதான அங்கம் வகித்த பறை வாத்தியம் தற்போது மரண வீட்டில் மட்டும் வாசிக்கும் இசைக்கருவியாக மருவி வந்தது எப்படி..!

வரலாறுகள் மூலம் நிலைத்து நிற்கும் பறை வாத்திய கருவி மீண்டும் தமிழர்களின் பிரதான வாத்திய கருவியாக வரவேண்டும் அதன் இசையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்த ‘பறை திருவிழா’ நல்லதொரு முயற்சி.

இந்நிகழ்வில் ஈழத்து கலைஞர்கள் மட்டுமே பங்குபற்றியிருந்தார்கள். அதில் ஈழத்து உணர்ச்சிப்பாடகர் ‘சாந்தன்’ அவர்களின் பெறாமகனும் கலந்து கொண்டு உணர்ச்சிப்பாடல்களை பாடி மகிழ்வித்தார். விழா நிறைவில் அவருடனும் ஏற்பாட்டாளர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டது ஏதோ நிறைய மனநிறைவை தருகிறது.

ஒரு சில பாடல்கள் எடுத்து வரப்பட்டுள்ளன. விரும்பினால் பார்வையிடலாம்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா...

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605