இலங்கையர்கள் பலரிற்கு இவருடைய இரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் இரத்த உறவுகள் இவருக்கு அதிகம். இன்று 11.09.2025 வியாழக்கிழமை தனது 53வது பிறந்த நாளை கொண்டாடும் நண்பன் செல்வராசா வேலாயுதபிள்ளை அவர்கள் இன்றுடன் 54 தடவைகள் இரத்த வங்கிக்கு இரத்தம் வளங்கியுள்ளார்.
இருப்பதில் கொடுப்பதில் பேரின்பம் காண்பவர். காரைநகரில் தனக்குண்டான 6 பரப்பு காணியில் 2 பரப்பு காணியை J/47 கிராமசேவகர் காரியாலயம் அமைக்க காரைநகர் பிரதேச செயலகத்திற்கு எழுதிக்கொடுத்தவர்.
நல்ல ஊருக்கு சொந்தக்காரர், அநுராவிற்கு வேலைக்கு போவார். அடிப்படை சம்பளம் தான் ஆனாலும் கொடுப்பதில் கொடையாளி. கோடிகள், இலட்சங்கள் தேவையில்லை கொடுப்பதற்கு… இருப்பதில் கொடுப்பதில் தயங்குவதில்லை. காலையில் காரைநகர், மதியம் கிளிநொச்சி, மாலையில் அநுராதபுரம், இரவு கொழும்பு… யார் கேட்டாலும் எத்தேவை என்றாலும் All Ceylon முழுவதும் எங்கும் எப்போதும் செல்ல தயார்.
‘ காரை மண்ணின் சேவையாளன்’ செல்வராசா, கெளரவ விருது வழங்கியது நண்பனாக இருந்ததனால் என்று பலரும் நினைத்தாலும் விருதிற்கு தகுதியானவர் தான் செல்வராசா என்று எப்போதும் துணிந்து சொல்வேன்.
வாழ்க்கை ஒரு முறை தான். அதை அர்த்தம் உள்ளதாக ஆக்குவோம்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்வராசா..!





