(அறிந்தும் அறியாதவை.. எங்கள் ஊர் மன்றம்..)
காரைநகர் அபிவிருத்தி சபை 08.07.2023 முதல் இன்று வரை தற்காலிக தலைவர் திரு.வி.ஹம்சன், செயலாளர் திரு.பொ. பரந்தாமன், பொருளாளர் திரு.மு.பரம்தில்லைராஜா ஆகியோரின் வழிநடாத்தலில் நிர்வாக சபை செய்தவை என்ன…செய்ய மறந்தவை என்ன..? கொஞ்சம் அறிந்து கொள்வோமா..!
13,500 L தண்ணீர் பெளசர் – 1 L தண்ணீர்: 1.30( ஒரு ரூபா 30 சதம்) விற்பனை.
ஒரு நாள் தண்ணீர் வியாபாரம் மூலம் தின வருவாய்: (13,500*1.30) = 17,550
cleaner தினகூலி: 1850
மொத்த தினகூலி கூலி செலவு : 3,700
எரிபொருள் செலவு: 7,000
(3,700 + 7,000 = 10,700)
ஒரு நாள் தண்ணீர் வருமானம்: 17,500 – 10,700 = 6,800 ரூபா தினசரி வருமானம்.
மாதம் (6,800*30)= 204,000(இரண்டு இலட்சத்து நான்காயிரம்)
வருட வருமானம்: (204,000 * 12) = 24,48000 ( இருபத்து நாலு இலட்சத்து 48 ஆயிரம்)
இரண்டு வருட மொத்த வருமானம்: (24,48000*2)= 48,96000(நாற்பத்து ஒன்பது இலட்சம்).
தண்ணீருக்கான தேவை இருந்தும், காரைநகர் அபிவிருத்தி சபையிடம் இருந்து தண்ணீர் பெற்றுக்கொள்ள காரை மக்கள் ஆர்வமாக இருந்தும், ஒரு நாளிற்கு ஒரு பெளசர் தண்ணீர் விநியோகம் மட்டுமே செய்தாலும் வருடம் ஒன்றிற்கு 24 இலட்சம் இலாபமாக பெற முடிந்தும், இரண்டாவது லோட் தண்ணீர் வளங்க இரண்டு வருடமாக நடவடிக்கை எடுத்தது இல்லை.
தண்ணீர் விநியோகம் எனப்படும் பணியின் ஊடாக காரை மக்களிற்கு குடிநீர் வளங்குவது ஒருபுறம் இருந்தாலும், காரைநகர் அபிவிருத்தி சபை அனைத்து செயற்பாடுகளையும் தண்ணீர் விநியோகத்தின் ஊடாக பெறப்படும் இலாபத்தின் ஊடாக மீண்டும் அதே மக்களிற்கு மேலும் பணிகள் செய்யக்கூடியதாக இருந்திருக்கும்.
Driver, Cleaner, எரிபொருள் செலவு போக எஞ்சிய இலாபம் 49 இலட்சம். அதிலும் வருடாந்த பெளசர் பராமரிப்பு செலவு மேலதிகமாக 10 இலட்சம் வைத்துக்கொள்வோம்.
39 இலட்சம் ஊடாக காரைநகர் அபிவிருத்தி சபை கடந்த இரண்டு ஆண்டுகளில் தற்காலிக நிர்வாக சபை என்ன செய்தார்கள் என்பதை 28.09.2025 நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அறிந்து கொள்ளுங்கள்.
இது காரைநகர் அபிவிருத்தி சபைக்கு கிடைக்கும் வருமானத்தின் ஒரு உதாரணம். இன்னும் சொல்லப்பட வேண்டியதும் அறிந்து கொள்ளப்பட வேண்டியதுமான வரவும் செலவும் கணக்கறிக்கை வெளியிடாமலே காரைநகர் அபிவிருத்தி சபையின் உத்தேச வரவு செலவுகளையும், அறிக்கையில் வெளிவர முன்னர் கணிக்கின்ற திறமையும் அதற்கான தொடர்புகளும் ‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் ஆகிய எனக்கு உண்டு.
ஆனால் என்னால் நடாத்தப்பட்ட இரண்டு உத்தியோக பூர்வமற்ற கலந்துரையாடலின் போது தலைவரிற்கு பொருளாளர் கணக்கறிக்கை தொடர்பாக எந்தவொரு இலக்கமும் தெரிந்திருக்கவில்லை.
பொருளாளர் கணக்கறிக்கை நிர்வாக சபை கூட்டங்களில் தெரிவித்தது இல்லை.
இவை தவிர காரைநகர் அபிவிருத்தி சபையின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரும் நிரந்தர வைப்புக்களிற்கான வட்டி வரும் வைப்புக்கள்:
பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம்
1). 10 இலட்சம் – வைத்திசாலை
2). 10 இலட்சம் – காரை இந்து
கனடா காரை கலாசார மன்றம்
1). 10 இலட்சம் – பாலாவோடை பாடசாலை நிரந்தவைப்பு
2). 5 இலட்சம் – ஈழத்து சிதம்பரம் நிரந்தர வைப்பு
3). ஒரு கோடி 10 இலட்சம் – 11 பாடசாலைகளிற்கான நிரந்த வைப்பு
பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கம்
1). 15 இலட்சம் – முன்பள்ளி ஆசிரியர்களிற்கான கொடுப்பனவு வைப்பு.
இவற்றைவிட காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகம் கல்வி உதவிகளிற்காக கேட்கிற போதெல்லாம் கொடுப்பதற்கு ஹற்றன் நாஷனல் வங்கியில் நிரந்த வைப்பில் உள்ள கனடா காரை கலாசார மன்றத்தின் 65 இலட்சம் ரூபாய்களில் இருந்து பெறப்படும் வட்டி.
இவை தவிர காரைநகர் அபிவிருத்தி சபையின் கடந்த நிர்வாக சபையினர்கள் நிரந்தர வைப்பில் இட்ட நிதிகள் எனவும் அவற்றில் இருந்து பெறப்படும் வங்கி வட்டிகள்.
இவற்றின் ஊடாக கடந்த இரண்டு வருடங்களாக திரு.வி.கம்சன் தலைமையிலான நிர்வாக சபை ஊரிற்காக என்ன பணிகள் செய்தார்கள் என தயவு செய்து 28.08.2025 நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு சென்று அறிந்து கொள்ளுங்கள்.
ஊரிற்கான பணம், ஊரிற்காக வெளிநாடுகள் வாழ் மக்களாலும் ஊரவர்களாலும், வங்கி வட்டிகள் ஊடாகவும் பெறப்பட்டாலும் கோரம் இல்லாத கூட்டத்தை கூட்டி காரைநகர் அபிவிருத்தி சபையை இல்லாது ஒழிக்கப்போகிறார்களா அல்லது ஆக்கமும் ஊக்கமும் அனுபவமும் சிந்தனையும் கொண்டு தலைவராகவோ செயலாளராகவோ அல்லது பொருளாளராகவோ இல்லாது போனாலும் சாதாரண நிர்வாக சபை உறுப்பினர்களில் ஒருவராக இருந்து அனைத்தையும் நிறைவேற்றவும் 11வது நிர்வாக சபை அங்கத்தவராக இருந்து ஊர்மக்களிற்கு சேவை செய்ய போகிறீர்களா என்பதை ஆயுட்கால அங்கத்தவர்களும் 2024ம் ஆண்டு அங்கத்துவ பணம் செலுத்தியவர்களும் 29.09.2025 அன்று தீர்மானியுங்கள்.
28.09.2025 பொதுக்கூட்டத்திற்கு இன்னமும் இரண்டு வாரங்களிற்கு மேல் உள்ள நிலையில் காரைநகர் அபிவிருத்தி சபை சார்ரந்து காரைமக்கள் அறிந்து கொள்ளாத பல விடயங்கள், சிந்தனைக்கு கூட எட்டாத பல உண்மைகள் ஒவ்வொன்றாக எனது முகநூலில் எடுத்து வரப்படும்.
உங்களது கருத்துக்களை அறிந்து கொண்டு 28.09.2025 அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு ஊர்ப்பற்றும் சேவை மனப்பாங்கும் தலைமைத்துவ பாங்குடன் அனைவரையும் அரவணைத்து செல்லும் நிர்வாகத்தை தெரிவு செய்ய வெளிநாடுகளில் வசிக்கும் நாம் ஆலோசனை வழங்கவும் கடந்த இரண்டு கலந்துரையாடலை போன்று பொதுக்கூட்டத்திற்கு முதல் வாரம் 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் மாலை 7 மணிக்கு மீண்டும் ஒரு கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்படவுள்ளது.
உண்மைகளை பேசுவோம். தற்காலிக திரு.ஹம்சன் தலைமையிலான நிர்வாக சபை கடந்த இரண்டு ஆண்டுகால இருண்ட நிர்வாகத்தில் வெளிப்படையாக செய்த பணிகள் உண்மையானது எனில் பொதுக்கூட்டத்திற்கு ஒரு வாரம் முந்தைய நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகால வரவு செலவு கணக்கு அறிக்கையினை ஆயுட்கால அங்கத்தவர்களிற்கும் கடைசியாக அங்கத்தவர்களாக இருந்த 2024ம் ஆண்டு அங்கத்தவர்களிற்கும் 21.09.2025 க்கு முன்னர் அவர்கள் கைகளில் கிடைக்க கூடிய வகையில் ஆவண செய்வார்கள் .
என்ன செய்தார்கள்… என்ன செய்யவில்லை என்பதை தவிர்த்து…நிர்வாகத்திற்குள்ளேயே வெளிப்படை தன்மை அறவே இருந்தது இல்லை… இந்த வகையில் கடைசி நாள் 29.09.2025 அன்று நிர்வாகத்தை கைவிட்டு செல்கின்ற அதே நாளில் கடந்த இரண்டு வருட கணக்கறிக்கை மற்றும் வாய்திறக்காத செயலாளரின் செயற்பாட்டு அறிக்கையினை அதே நாளில் பார்வையிட்டு ஒரு சில நிமிடங்களில் அங்கீகரிக்கவோ அல்லது எதிர்க்கவோ வேண்டிய அவசியம் வெளிநாடுகள் வாழ் ஆயுட்கால அங்கத்தவர்களிற்கு இல்லை. எனவே செயலாளர் செயற்பாட்டு அறிக்கை, பொருளாளர் கணக்கறிக்கை என்பன ஒரு வாரம் முன்னதாக வெளியிட வேண்டும் என்பதை இதுவரை காலமும் வெளிப்படை தன்மை இன்றி இயங்கி வந்த நிர்வாக சபையினை கேட்டுக்கொள்கிறேன்.
இது ஒரு பொது அமைப்பு. இங்கே இரகசியங்கள், ஆச்சரியங்களிற்கு இடமில்லை. உங்களது தனிப்பட்ட நல்லெண்ணங்களையும் காரைநகர் மக்களிற்கும் இடம்பெயர்ந்தாலும் ஊரோடும் உறவோடும் கலந்துள்ள நல்லுள்ளங்களிற்கு புரிய வையுங்கள். நன்றி.



