‘ஈழத்து சிதம்பரம்’ எனப்போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன் கோயில் முடக்கப்பட்டு மூன்றாண்டுகள் முடிவுற்ற போதிலும் இன்று 01.04.2026 பங்குனி உத்தர நன்னாளிலே கும்பாபிஷேகத்திற்கான ‘கும்பாபிஷேக விஞ்ஞாபனம்’ அறிவித்தல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஏமாற்றமே மிஞ்சியது.
‘நடக்கும்… ஆனால் நடக்காது…’
இது தான் இன்றைய நிலமை. வெளிநாட்டவர்கள் கலந்து கொள்ளக்கூடாது. ஒருவேளை காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகத்தின் போது ‘வெளிநாட்டவர்கள்’ கலந்து கொள்ள தடை செய்யப்படுவதற்காக கோர்ட் உதரதரவும் பெறப்படலாம். எனவே யாரும் அவசரப்பட்டு ‘ரிக்கட்’ புக்கிங் செய்து விடாதீர்கள்.
பரமேஸ்வரன் தனக்கு எது எப்போது சாத்தியமோ அது அப்போது மட்டும் வெளியிடுவான். அது மட்டுமல்ல அந்த பரமேஸ்வரனே எப்ப எப்பிடி எங்க என்ன செய்யவேணுமோ அதை சிறப்பாகவும் வெளிப்படையாகவும் செய்து காட்டுவான்.
நம்புங்கள் எல்லாமே நன்மைக்காகத்தான்.



