கனடா காரை கலாசார மன்றம், கடந்த ஒரு வருடமாக இயங்காத நிலையில் தற்போதைய நிலமை..!
காரை நியூஸ் ஊடாக சொன்னால் தான் பலருக்கும் புரியும் என்பதோடு, அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பொழுது போக்கிற்காக ஒருசிலர் சில விடயங்களை மட்டும் அறிந்து கொண்டு கனடா காரை கலாசார மன்றம் பற்றிய தப்பான புரிதலை கொண்டுள்ளார்கள்.
அந்த பக்கமும் இல்லாமல் இந்த பக்கமும் இல்லாமல் மன்றத்தையும் மன்றத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகளிற்கு ஆதரவு அளித்து வருபவர்களும் கனடா காரை கலாசார மன்றம் தொடர்ந்து கனடாவில் செயற்பட்டு மக்களிற்கும் மண்ணிற்கும் சேவைகளை தொடர வேண்டும் என நினைப்பவர்கள் கடந்த ஒரு வருடமாக எதுவும் அறியாதவர்கள்.
சமூக வலைத்தளங்களில் தமது அறிவிற்கு ஏற்ப தமது மனங்களில் உள்ள கழிவுகளை கொண்டு வந்து கொட்டும் இடமாக பல குப்பை WhatsApp குறூப்புகளை அமைத்து வைத்து குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக இயங்காது இருக்கும் கனடா காரை கலாசார மன்றம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை இங்கே அறிந்து கொள்ளலாம்.
2024.04.28 அன்று அதாவது ஒரு வருடத்திற்கு முன்பு மன்றத்தின் பொதுக்கூட்டத்தில் திரு.முத்து பொன்னம்பலம் எனப்படும் நபரை தலைவராக கொண்டு மன்றத்தின் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. அன்றைய பொதுக்கூட்டத்தின் பிரகாரம் முத்து பொன்னம்பலம் எனப்படும் நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மன்றத்தின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டார்.
முத்து பொன்னம்பலம் எனப்படும் நபர் கடந்த 15 ஆண்டுகளிற்கும் மேலாக கனடாவில் தனிப்பட்ட அவரது காரணங்களினால் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருபவர். ஆனாலும் கனடா காரை கலாசார மன்றத்திற்கும், கனடா காரைநகர் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்திற்கும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள காரை அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகள் உட்பட 20 நபர்கள் வரையானோரிற்கு எதிராக தனது மானம் போய்விட்டதாக சிவில் வழக்கான மானநஷ்ட ஈட்டு வழக்கை தொடுத்திருந்தார்.
முத்து பொன்னம்பலம் எனப்படும் நபர் ஆங்கிலத்தில் புலமையும் அதீத அறிவு வளர்ச்சியும் கொண்டிருப்பதாலும், வேறு வேலைகள் இன்றியும், குடும்பம், பெற்றோர், உறவுகள் என வேறு எந்த பொறுப்புக்களும் அற்ற நிலையில் இருப்பதாலும், எந்தவொரு சமுதாயத்திலும் தனது முகத்தினை காட்டாது கடந்த 15 ஆண்டுகளிற்கு மேலாக வாழ்வதாலும், தனது சொந்த முயற்சியினால் கனடாவில் சிவில் வழக்கினை தொடர்வதற்கான வழிமுறைகளை பின்பற்றி மேற்படி வழக்குகளை தொடர்ந்து வருகிறார்.
ஆனாலும் அவரால் தொடரப்பட்ட வழக்குகளில் தனது மானம் போய்விட்டதாகவும், தன்னை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை சொன்னதாகவும் தொடரப்பட்ட வழக்குகளில் சட்டத்தின் பிரகாரம் நீதியும் நியாயமும் இருக்கிறதோ இல்லையோ அவரால் தொடரப்பட்ட வழக்குகளை எதிர் கொள்ள தனிப்பட்ட நபர்களும் கனடா காரை கலாசார மன்றமும் முயற்சித்தன.
ஆரம்பத்தில் 2017ம் ஆண்டு முதன் முதலில் தீசன் திரவியநாதன் ஆகிய எனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினையும் வக்கீல் மூலமாக கையாண்ட நிலையில் 15,000 டொலர்கள்(அண்ணளவாக முப்பது இலட்சம் ரூபாய்கள்) செலவு செய்த நிலையில் சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என முடிவெடுத்து முத்து பொன்னம்பலம் கால்களில் விழுந்தேன்.
அதே போன்று கனடா காரை கலாசார மன்றமும் ஆரம்பத்தில் முத்து பொன்னம்பலத்திற்கு எதிராக வக்கீல் மூலமாக வழக்கினை எதிர்கொள்ள தயாரானது. அதன் பிரகாரம் 38,000 டொலர்களை செலவு செய்துள்ளதாக நம்பப்படுகிறது. இன்னமும் 40,000 டொலர்கள்(80 இலட்சம் ரூபாய்கள்) அப்போதைய வக்கீலுக்கு கொடுக்கப்பட வேண்டியுள்ளது.
இந்த நிலையில் தான் முத்து பொன்னம்பலம் எனப்படும் நபருக்கு எதிராக 2024.04.28 வரை கனடா காரை கலாசார மன்றத்தின் திரு.சிவசம்பு சிவநாதன் தலைமையிலான நிர்வாகத்தில் தீசன் திரவியநாதன் ஆகிய நான் பங்கேற்றிருந்ததுடன் முத்து பொன்னம்பலத்திற்கு எதிரான வழக்குகளில் மன்றத்தின் பணம் செலவிடப்படுவதையும், முத்து பொன்னம்பலத்தினால் தொடரப்பட்ட வழக்குகளிற்கு அவரிடமே சரண்டைய வேண்டும் என்றும் அதற்காகவே கடந்த 15 ஆண்டுகளாக கனடாவில் தலைமறைவு வாழ்க்கை வாழும் ஒருவரான முத்து பொன்னம்பலத்திடம், கொரோனா கொடிய நோய் அறிமுகப்படுத்திய Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக தனது குரல் ஊடாக (voice audio) மட்டுமே கனடா காரை கலாசார மன்றத்தின் பொதுக்கூட்டத்தில் 28.04.2024 அன்று கலந்து கொண்ட முத்து பொன்னம்பலம் எனப்படும் நபர் மன்றத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கனடா காரை கலாசார மன்றத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த முத்து பொன்னம்பலம் அவர்களே வழக்காளியாகவும் எதிராளியாகவும் செயற்பட்டு வருகிறார். இந்த தர்ம சங்கடமான நிலையினை தோற்றுவிக்க கனடா காரை கலாசார மன்றமானது யாப்பு விதிகளை மீறியதா..? முத்து பொன்னம்பலம் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சிலர் இன்று கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தை செயற்படுத்தினார்களா அல்லது செயற்படுத்த என்ன காரணங்களை கடந்த ஒரு வருடமாக கண்டு பிடித்துள்ளார்கள் என்பதை பொழுது போக்குற்காக சமூக வலைத்தளங்கள் ஊடாக தனிப்பட்ட ஒருசிலர் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிகளை தமது அறிவிற்கு ஏற்ப கழுவி கழுவி ஊத்துவதற்கு அவ்வப்போது பல தளங்கள் உருவாகிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறான வலைத்தளங்களில் பேசப்படும் கருத்துக்களும் செயற்பாடுகளும் ஒருபோதும் கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தை கொண்டு வரப்போவதில்லை.

முத்து பொன்னம்பலம் எனப்படும் நபரால் தொடரப்பட்ட வழக்குகளை கனடா காரை கலாசார மன்றமோ அல்லது தனிப்பட்ட ஒரு சிலரோ எதிர்த்து வாதாட எந்த வகையிலும் தயாராக இல்லாத நிலையில் அவர்களிற்கு எதிராக default judgement எனப்படும் முறையினை நாடலாம் அல்லது அது கோர்ட் இற்கு மிகப்பெரும் சவாலாக அமையலாம், காரணம் முத்து பொன்னம்பலம் எனப்படும் நபரின் கடந்த கால செயற்பாடுகளும் அவருடைய இன்றைய நிலைப்பாடும் அவருடைய தனிமனித வாழ்க்கை முறையினையும் கோர்ட் நன்கு அறியும், இந்த நிலையில் வழக்கறிஞருக்கு பணம் வழங்க முடியாத நிலையில் எதிர்த்தரப்புகள் உள்ள நிலையில் உண்மையை தெரிந்து கொண்டும் வழக்கினை முன்னெடுக்க முடியாத காரணத்தினால் எவ்வாறான default judgement தீர்ப்பினை கனடிய நீதிமன்றம் வழங்கும்…?
இவற்றின் மூலமாக கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகம் சீர் பெறுமா… அல்லது கடவுள் காலத்தின் மாற்றத்தினால் எதிர்பாராத திருப்பங்களை கொண்டு வருவாரா என்பது கடவுளின் தீர்ப்பில் தங்கியுள்ளது.
‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் என்றும் எப்போதும் உண்மைகளை மட்டும் உரிய நேரத்தில் சொல்லும். எதிர்பாருங்கள். தொடர்ந்து பேசுவோம்.



