காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு அறக்கொடை வள்ளல் திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் நிதி அனுசரணையில் புனரமைக்கப்பட்டு இன்று14/10/2024 திங்கட்கிழமை காலை11:00மணியளவில் திறந்துவைக்கப்பட்டது இந்நிகழ்வில்
சிறப்பு விருந்தினர் திரு சு.கதிர்காமநாதன் (பரோபகாரி அறக்கொடைச்செம்மல்), கெளரவவிருந்தினர் DR.V.P.S.D.பத்திரன(வடமாகாண சுகாதார சேவை பணிப்பளர்), DR. T.சத்தியமூர்த்தி(பணிப்பாளர் யாழ் போதனா வைத்தியசாலை), யாழ் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திரு. றேயோன், செல்வி. B. நிரஞ்சனா(பிரதேச செயலாளர் காரைநகர்) மற்றும் வைத்தியசாலை நலன்புரி சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வைத்தியாசலை ஊழியர்கள்மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அண்மைக்காலத்தில் மேற் கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகள், வைத்தியசாலையின் காணி அரசுடமையாக்கல், வைத்திய சாலையின் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக கலந்து உரையாடப்பட்டது.









