காரை மண் அன்றும் இன்றும் என்றும் தனக்கென தனித்துவமான அடையாளத்தை கொண்டு விளங்கும் நிலமாகும். யாழ்ப்பாணம் என்பதை விட ‘காரைநகர்’ என்ற பெயர் தேசிய அளவில் தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டு விளங்கும் பூமியாகும். கல்வியிலும் வியாபாரத்திலும், கலைகளிலும், சமயத்திலும் அரசியலிலும் எக்காலத்திலும் உயிர்ப்போடு மண்ணை வளமாக்கும் வல்லமை கொண்ட பூமியாக திழ்கிறது.
2024 இலங்கையில் புதிய அரசியல் தொடங்கியுள்ள நிலையில் இளம் சமூகத்தில் இருந்து அறிமுகமாகிறார் திரு. E.S.P.நாகரத்தினம் கமலரூபன் அவர்கள். அரசியலுக்கு காலடி எடுத்து வைக்கும் கமலரூபன் அவர்களை எங்கள் ஊர் சார்பாக எம்மக்கள் சார்பாக வாழ்துவதோடு. அரசியலில் இணைந்து கொள்ள துணிவுடன் கால்பதிக்கும் திரு.நாகரத்தினம் கமலரூபன் அவர்களை கட்சி அரசியல், தேர்தல் அரசியல் கடந்து காரை மண்ணின் புதல்வனாக வாழ்த்துகிறது ‘எனது ஊர் காரைநகர்’
ஆயிரம் மைல் தூரம் கொண்ட பயணத்தில் முதல் அடி எடுத்து வைக்கும் கமலரூபன் தனது பயணத்தில் வெற்றிபெற வாழ்துவோமாக.