நாள் : Tuesday, August 25, 2026
--:--:--
👁️
Awareness

காரைநகர் சிவபூமி.

காரைநகர் சிவபூமி. சிவன் மீது பற்று வைத்து சிவபூசை கண்டு, ஆருத்திரா தரிசனம் கண்டு இப்பிறப்பை கடந்து செல்ல அல்லும் பகலும் சிவனோடு ஐக்கியமான பலர் கடந்த மூன்று ஆண்டுகளாக அதை காணாமலே கடந்து போய்க்கொண்டுள்ளார்கள்.(செத்து போனார்கள்).

பாலஸ்தாபனம் என்னும் பெயரில் நூற்றாண்டு அருட்கடாட்சம் கொண்ட சிவனின் ஜீவனை சாகடித்து மூன்றாண்டுகளிற்கு மேலாக சிவனை சாகடித்து விட்டார்கள்.

சிவனிற்கு பாலஸ்தாபனம் செய்தால் 45 நாட்களிற்குள் மூலஸ்தாபனத்திற்குள் மீண்டும் கொண்டு செல்ல வேண்டும் என்று ஆகம விதி தெரியாத அடக்காபிடாரிகளால் காரை மண் இழக்கப்போவது இன்னும் பல…

சோத்துக்காகவும் சொந்த பகைகளிற்காகவும் சிவனை வெளியேற்றி விட்டு இன்னும் யாருக்காக திருப்பணி..!

ஈழத்து சிதம்பரம் என பெயர் கொண்ட எங்கள் ஊர் திண்ணபுரம் சிவனின் ஆகம விதிகளை தெரிந்து கெள்ள உலகின் நடுநாயகமாக விளங்கும் தமிழ்நாடு சிதம்பர தீட்சதகர்கள் 450 குடும்ப வம்சாவழிகள் வழி வந்த பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தீட்சதகர்கள் ஆலோசனை பெற்றார்களா..?

நூற்றாண்டு பழமை கொண்ட எங்கள் ஊர் சிவனின் ஜீவனை சாகடித்து விட்டார்கள்.

திட்டம் போட்டு ஒவ்வொன்றாக வெளியேற்றி, ஐயர் முதல் ஆண்டாண்டு கால ஆதினகர்த்தாக்கள் வரை வெளியேற்றி, கோயிலுக்குள் க்க்கூசும், சோத்துக்காக கோயிலும் என்று ஆக்கியவர்களால் இனி ஒரு போதும் குடமுழுக்கு செய்ய முடியாது.

சொத்துக்கு மேல் சொத்து சேர்கவும், சேர்த்த சொத்துக்கு இனிமேல் தான் ஆதாரம் தேடும் சிலரால் காரைநகர் கலாசாரமும், காரை மக்களின் சிவ நம்பிக்கையும் கரைந்து போய்க்கொண்டிருக்கிறது.

சிவன் சொத்து குல நாசம்.

சிவனை முன்னிறுத்தி தமது வியாபாரத்தை முன்னெடுக்கும் எவனும் அடுத்த சந்ததியே உருப்பட முடியாத சூழ்நிலைக்கு தான் அவர்கள் உழைப்பு பயன்ற்று வீணாகும்.

எங்கள் ஊர் காரை சிவனின் வரலாற்ரை கடந்த நூறு ஆண்டுகளில் அறிந்தவர்களும் புரிந்தவர்களும் நன்கு அறிவார்கள்.

சிவனிற்காக வாழ்வோம். சிவனோடு சேர்வோம்.

சிவனாவோம். அன்பே சிவம்.

அதனால் தான் காரைநகர் சிவபூமி.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605