நாள் : Thursday, September 17, 2026
--:--:--
👁️
Awareness

காரைநகர் நீலிப்பந்தனை நிலவரம்: 14.03.2026

காரைநகர் நீலிப்பந்தனை நிலவரம்: 14.03.2026

– 60 ஆண்டுகளாக வெள்ளத்திலும் பள்ளத்திலும் வாழ்ந்த நீலிப்பந்தனை மக்கள்…

– இன்னமும் அதே நிலமையில் தான் வாழ வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.

– வெள்ளத்திலும் பள்ளத்திலும் வாழ்ந்தாலும் வீராப்புக்கு குறைவில்லை…

– ‘ஒத்தையடி பாதை என்றாலும் எனக்கு பரவாயில்லை, ஊரை உருப்பட விடமாட்டோம்’ என்றொரு ‘கோஷ்டி’

– 21ம் நூற்றாண்டிலாவது 20ம் நூற்றாண்டு வளச்சியை அடையத்துடிக்கும் மற்றொரு ‘கோஷ்டி’

– கோயிலா குளமா என்பதல்ல போட்டி… யாருடைய ‘குண்டி’ நாறப்போகிறது என்பது தான் நீங்கள் கண்டு கொள்ளப்போவது.

– நாஸ்திகமா… ஆஸ்திகமா…!

– குருக்களுடன் கோபித்துக்கொண்டு கோயிலுக்கு செல்லாதவர்கள் கடவுளுக்காக வக்காலத்து வாங்குவார்களாம்…

– ‘பேச்சு பல்லக்கு… தம்பி கால் நடை..’

– மாரியில் அனுபவிப்பது நீங்கள்…

– பிரதேச சபையையோ அல்லது அநுர அரசையோ காரணம் சொல்வதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது..

– ‘கோடு போட்டால் றோடு போட’ தயாராக இருக்கும் ‘எனது ஊர் காரைநகர்’

– நீங்கள் கோடு போடுவீர்களா அல்லது 1960ம் ஆண்டுகளைப்போல் கோவணத்துடன் வெள்ளத்தில் இன்னமும் நடந்து போகப்போகிறீர்களா என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.

ஆனாலும் நான் யார் என்பதையும் கூறுகின்றேன்.

– நான் அநுரவின் தொண்டன் காரணம் ‘ஊழல் அற்ற ஆட்சி’

– நான் UNP , காரணம் எங்கள் மண்ணின் மைந்தன் தியாகராசா மகேஸ்வரன் எமது ஊரிற்காக சைவ சமயத்திற்காக செய்த அளப்பெரும் பணிகளை அறிந்தவன்.

– நான் சைக்கிளிலும் ஓடுவேன் மானிலும் அக்கறை கொள்வேன் காரணம் ‘தமிழன்’ என்ற உணர்வை இன்னமும் நிலைநிறுத்திக்கொண்டிருப்பவை.

– நான் ‘வீட்டுக்கு’ எப்போதும் விசுவாசி காரணம் தலைவர் சொல்லிட்டு போய்ட்டார்.

– ஆனாலும் நான் ‘பச்சோந்தி’ அல்ல… காரணம் இப்ப எனக்கு தேவை ‘ எனது ஊர் காரைநகர்’

– ஊரை வளப்படுத்த எந்த கட்சி வந்தாலும் எந்த ஆட்சி வந்தாலும் நானும் அந்த கட்சி. அந்த வகையில் நானும் ‘EPDP’

15.03.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கு நீலிப்பந்தனையில் ஒரு பொதுக்கூட்டம்.

கலாநிதி வீரமங்கை ஸ்ராலினா யோகரட்ணம் தலைமையில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் தீசன் திரவியநாதன் ஆகிய நான் ‘மெளனவிரதம்’ கடைப்பிடிக்கவுள்ளதால், ஊர்மக்களுடன் வெறும் பார்வையாளராக மட்டும் கலந்து கொண்டு எனது பிரதேசத்திற்கான பங்களிப்பை எனது பிரசன்னத்தின் ஊடாக மட்டும் வளங்குவேன்.

‘எல்லாம் உங்கள் செயல்’

நன்றி.

தீசன் திரவியநாதன்

‘எனது ஊர் காரைநகர்’

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

தமிழ்நாடு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விடிந்தால் கும்பாபிஷேகம். காரைநகரில் இருந்தும் பலர் தரிசனத்திற்காக சென்றுள்ளார்கள்.

தமிழ்நாடு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விடிந்தால் கும்பாபிஷேகம். காரைநகரில் இருந்தும் பலர் தரிசனத்திற்காக சென்றுள்ளார்கள். 17 ஆண்டுகளிற்கு...

உண்மையுடனும் ஊர் நல்லெண்ணத்துடனும் காரைநகர் மக்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன் அடுத்து என்ன செய்யலாம்…!

உண்மையுடனும் ஊர் நல்லெண்ணத்துடனும் காரைநகர் மக்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன் அடுத்து என்ன செய்யலாம்…! காரைநகர் நீலிப்பந்தனை கிராம மக்களின் கடந்த...

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605