காரைநகர் நீலிப்பந்தனை நிலவரம்: 14.03.2026

காரைநகர் நீலிப்பந்தனை நிலவரம்: 14.03.2026

– 60 ஆண்டுகளாக வெள்ளத்திலும் பள்ளத்திலும் வாழ்ந்த நீலிப்பந்தனை மக்கள்…

– இன்னமும் அதே நிலமையில் தான் வாழ வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.

– வெள்ளத்திலும் பள்ளத்திலும் வாழ்ந்தாலும் வீராப்புக்கு குறைவில்லை…

– ‘ஒத்தையடி பாதை என்றாலும் எனக்கு பரவாயில்லை, ஊரை உருப்பட விடமாட்டோம்’ என்றொரு ‘கோஷ்டி’

– 21ம் நூற்றாண்டிலாவது 20ம் நூற்றாண்டு வளச்சியை அடையத்துடிக்கும் மற்றொரு ‘கோஷ்டி’

– கோயிலா குளமா என்பதல்ல போட்டி… யாருடைய ‘குண்டி’ நாறப்போகிறது என்பது தான் நீங்கள் கண்டு கொள்ளப்போவது.

– நாஸ்திகமா… ஆஸ்திகமா…!

– குருக்களுடன் கோபித்துக்கொண்டு கோயிலுக்கு செல்லாதவர்கள் கடவுளுக்காக வக்காலத்து வாங்குவார்களாம்…

– ‘பேச்சு பல்லக்கு… தம்பி கால் நடை..’

– மாரியில் அனுபவிப்பது நீங்கள்…

– பிரதேச சபையையோ அல்லது அநுர அரசையோ காரணம் சொல்வதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது..

– ‘கோடு போட்டால் றோடு போட’ தயாராக இருக்கும் ‘எனது ஊர் காரைநகர்’

– நீங்கள் கோடு போடுவீர்களா அல்லது 1960ம் ஆண்டுகளைப்போல் கோவணத்துடன் வெள்ளத்தில் இன்னமும் நடந்து போகப்போகிறீர்களா என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.

ஆனாலும் நான் யார் என்பதையும் கூறுகின்றேன்.

– நான் அநுரவின் தொண்டன் காரணம் ‘ஊழல் அற்ற ஆட்சி’

– நான் UNP , காரணம் எங்கள் மண்ணின் மைந்தன் தியாகராசா மகேஸ்வரன் எமது ஊரிற்காக சைவ சமயத்திற்காக செய்த அளப்பெரும் பணிகளை அறிந்தவன்.

– நான் சைக்கிளிலும் ஓடுவேன் மானிலும் அக்கறை கொள்வேன் காரணம் ‘தமிழன்’ என்ற உணர்வை இன்னமும் நிலைநிறுத்திக்கொண்டிருப்பவை.

– நான் ‘வீட்டுக்கு’ எப்போதும் விசுவாசி காரணம் தலைவர் சொல்லிட்டு போய்ட்டார்.

– ஆனாலும் நான் ‘பச்சோந்தி’ அல்ல… காரணம் இப்ப எனக்கு தேவை ‘ எனது ஊர் காரைநகர்’

– ஊரை வளப்படுத்த எந்த கட்சி வந்தாலும் எந்த ஆட்சி வந்தாலும் நானும் அந்த கட்சி. அந்த வகையில் நானும் ‘EPDP’

15.03.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கு நீலிப்பந்தனையில் ஒரு பொதுக்கூட்டம்.

கலாநிதி வீரமங்கை ஸ்ராலினா யோகரட்ணம் தலைமையில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் தீசன் திரவியநாதன் ஆகிய நான் ‘மெளனவிரதம்’ கடைப்பிடிக்கவுள்ளதால், ஊர்மக்களுடன் வெறும் பார்வையாளராக மட்டும் கலந்து கொண்டு எனது பிரதேசத்திற்கான பங்களிப்பை எனது பிரசன்னத்தின் ஊடாக மட்டும் வளங்குவேன்.

‘எல்லாம் உங்கள் செயல்’

நன்றி.

தீசன் திரவியநாதன்

‘எனது ஊர் காரைநகர்’

More From Author

காரைநகர் மணற்காடு கும்பநாயகி முத்துமாரி அம்பாள் சப்பற திருவிழா: 16.03.2026 திங்கள்கிழமை.

காரைநகர் சுற்றுவட்ட வீதியை புனரமைக்கும் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வில் கெளரவ போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரட்நாயக்கா கலந்து கொண்டு பணிகளை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: karainewstheesan@gmail.com / theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Archive

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Recent Comments

No comments to show.