நன்றி…நன்றி… நன்றி..!
20.07.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றிய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி.
காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற்ற கலந்துரையாடல் மூலம் அறிந்து கொள்ளப்பட்ட விடயங்கள் மற்றும் மேற்கொண்டு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் இன்றைய கலந்துரையாடல் அறிக்கை மூலம் ஒரு சில தினங்களில் அனைவரும் அறிய வெளியிடப்படும்.
இன்றைய கலந்துரையாடல் ஆக்கபூர்வமாகவும், நாணயத்துடனும், மதிப்புடனும் நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி.
மூன்று மணி நேரம் இடம்பெற்ற கலந்துரையாடலை செவிமடுக்க அவ்வப்போது இணைந்து கொண்ட 40க்கும் மேற்பட்ட காரை நல்லுள்ளங்களுற்கும் அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கி காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்போதைய நிர்வாக செயற்பாடுகளையும் சிரமங்களையும் பரிமாறிக்கொண்ட அபிவிருத்தி சபை தலைவர் திரு. ஹம்சன் விஸ்வலிங்கம் அவர்களிற்கு முதற்கண் மிக்க நன்றி.
மேற்கொண்டு காரைநகர் அபிவிருத்தி சபை சார்பாக தலைவர் அவர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய செற்பாடுகளை நிர்வாக சபையுடன் இணைந்து இரண்டு வாரங்களிற்குள் அறியப்படுத்தவும் அதனை தொடர்ந்து ஒரு மாத காலத்தினுள் மற்றுமோர் கலந்துரையாடல் மூலம் காரைநகர் அபிவிருத்தி சபை எதிர்நோக்கும் சிரமங்களை களைந்து நிர்வாகம் சுதந்திரமாக இயங்க ஆவண செய்ய முடியும் என்கிற நம்பிக்கை இன்றைய கலந்துரையாடல் மூலம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய கலந்துரையாடலில் காரைநகர் அபிவிருத்தி சபை செயலாளர் மற்றும் பொருளாளர் கலந்து கொள்வதை தவிர்த்திருந்த போதிலும் அடுத்து வரும் கலந்துரையாடலில் கலந்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை நம்பிக்கை, நாணயம் கருதி புரிந்து கொள்வார்கள் என கருதுகிறோம்.
இன்றைய கலந்துரையாடல் அமைதியாகவும் ஆக்கபூர்வமாகவும் நடைபெறவும், பொறுப்புடனும், பொறுமையுடனும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தவர்களிற்கும் அமைதியாகவிருந்து செவிமடுத்த அன்புள்ளங்களிற்கும் மீண்டும் ஒரு முறை நன்றி கூறிக்கொள்கிறேன். இன்றைய கலந்துரையாடல் மூலம் பெறப்பட்ட விடயங்களும் பகிர்ந்து கொண்ட கருத்துக்களும் இரண்டொரு நாளில் அறிக்கையாக தெரியப்படுத்தப்படும். நன்றி.



