நாள் : Sunday, August 16, 2026
--:--:--
👁️
Awareness

காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான கலந்துரையாடல் சமூக வலைத்தளம் ஊடாக இலங்கை நேரம் 20.07.2025 ஞாயிறு மாலை 7.00 மணிக்கு நடைபெறும். கனடா நேரம் ஞாயிறு காலை 9.30.AM.

காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான கலந்துரையாடல் சமூக வலைத்தளம் ஊடாக இலங்கை நேரம் 20.07.2025 ஞாயிறு மாலை 7.00 மணிக்கு நடைபெறும். கனடா நேரம் ஞாயிறு காலை 9.30.AM.

காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாகவும், உலகம் வாழ் இடம்பெயர்ந்த காரை மக்களின் ஊடாகவும் தமக்கான உதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களும், குற்றம் குறைகளை மட்டும் கண்டு கொள்பவர்கள் ஏன் காரைநகர் அபிவிருத்தி சபையின் நிர்வாக செயற்பாடுகளை கண்டு கொள்ள முன்வரவில்லை…?

காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்காலிக நிர்வாக செயற்பாடுகளை அறிந்து கொள்ளவும் இன்றைய தற்காலிக நிர்வாக சபையின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டிய கடப்பாடு உங்களிற்கு இல்லையா..?

சுவிஸ் காரை அபிவிருத்தி சபை, பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கம். கனடா காரை கலாசார மன்றம், பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கம், அவுஸ்திரேலியா காரை கலாசார மன்றம், ஜேர்மன் காரை அபிவிருத்தி சபை, உங்கள் பிரதிநிதிகள் யாராவது உண்டா..? அல்லது முன்னாளில் உங்கள் பெயர் விளங்க மன்றங்கள் அமைத்து ஊர்ப்பணி செய்தவர்கள் நீங்கள் வாழ்ந்த ஊரை கைவிட்டு உங்கள் பிள்ளைகளால் அடுத்த நாடுகளிற்கு சம்பந்திகள் ஆகிவிட்டதால் பெற்ற தாயையும் பிறந்த பொன்நாட்டையும் மறந்து விட்டு இடம்பெயர்ந் நாட்டில் இப்போது தான் உல்லாசத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறீர்களா……?

இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா..? உங்கள் ஊர்ப்பற்றும், ஊர் அபிவிருத்தியும் உங்கள் பிள்ளைகளின் அடுத்த நாட்டின் வரன்களை கண்டு கொள்வதுடன் ஊராவது… மண்ணாவது… என்ற நினைப்பில்…

காரைநகர் அபிவிருத்தி என்றால் என்னவென்று உங்கள் பிள்ளைகள் அல்ல நீங்களும் கேஏள்வி கேட்க உங்கள் பிள்ளைகள் உங்களை தயார்படுத்தி விட்டார்களா…?

அமரர் ஜெ.தில்லையம்பலவாணர் அவர்களால் புத்துயிர் கொடுத்து ஆரம்பிக்கப்பட்டு, இடப்பெயர்விற்கு பின்னர் காரை மக்களிற்கு முதன் முதலில் குடி நீரும், அடிப்படை கல்வி வளங்க முன்பள்ளிகளையும், சிந்தனை வளர்க்க நூலகத்தையும், வருடத்திற்கு 15 பல்கலைக்கழக மாணவர்களையும் வளர்த்து விட்ட காரைநகர் அபிவிருத்தி சபை இன்று செயலிழந்து நிற்கிற போது அதற்கு புத்துயிர் கொடுக்க வேண்டிய தேவை உங்களிற்கு இல்லையெனில்… எதற்காக இதுவரை பாடுபட்டாய்…?

உங்கள் காலம் நீ உயிருடன் இருக்கும் போதே முடிந்து விட்டதா…? கொஞ்சம் சிந்தியுங்கள்….

என் முகநூலில் ஐந்தாயிரம் ஊரவர்கள் இருந்தாலும் 50 like கூட வருவதில்லை ஆனால் 50,000 பார்வையாளர்கள் பார்த்து விடுகிறார்கள், ஆனால் முகநூல் ஊடாக தெரிவிக்கப்படும் விடயங்கள் ஐந்தே நாளில் சரி செய்யப்பட்டு விடும். ‘ like’ க்குகள் முக்கியமல்ல செயலும் செயற்பாடுகளும் மட்டுமே ஊரிற்கான பயனை வளங்குகிறது என்பது தான் யதார்த்தம்.

பெயருக்காகவும் புகழிற்காகவும் ஊர்ப்பணி செய்ய ஒரு சில வருடம், ஒரு சில மாதம் பாடு பட்டவர்களே…காரைநகர் அபிவிருத்தி சபையை மீண்டும் இயக்க முன்வாருங்கள்.

நீங்கள் இதுவரை காலமும் ஊரிற்கான பணியை காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக செய்தவர்கள்… ஆனால் இன்று நீங்களும் செயலிளந்து விட்ட நிலையில் தனிப்பட்ட வகையில் யாரோ நாலு பேர்கள் ஊரிற்கு நல்லது செய்ய காரைநகர் அபிவிருத்தி சபை தேவை, அதனை மீண்டும் இயக்க 20.07.2025 இலங்கை நேரம் மாலை 7.00 மணிக்கு இருந்த இடத்தில் இருந்து தொடர்பு கொள்ள உங்கள் WhatsApp இலக்கத்தை அனுப்பி வையுங்கள்.

மேலே குறிப்பிட்ட வெளிநாடுகள் வாழ் காரை அமைப்புக்களின் முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் இதில் கலந்து கொள்ள வேண்டியது கட்டயமாகும். காரணம் உங்கள் பெயர்கள், உங்களது செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்படும். உண்மைத்தன்மை மற்றும் உங்கள் கடந்த கால பணிகள் ஊடாக இன்றும் என்றும் நீங்கள் ஊர்ப்பற்றாளர்கள் என்பதை உணர்த்துவதற்கு காரைநகர் அபிவிருத்தி சபையின் இயக்கமும் தொழிற்பாடும் இன்றும் இன்றியமையாதது.

உணர்ரந்து கொள்வீர்கள் என கருதுகிறேன். உள்ளதை சொல்லவும் அதனை துணிந்து சொல்லவும் ” எனது ஊர் காரைநகர்” என்றும் எப்போதும் எவருக்கும் அடிபணியாது.

கலந்துரையாடலில் கலந்து கொள்பவர் எவராக இருந்தாலும் தவறான வார்த்தை பிரயோகம் மேற்கொள்ளும் இடத்து அடுத்த கணமே இணைப்பில் இருந்து துண்டிக்கப்படுவீர்கள். எக்காரணம் கொண்டும் மீண்டும இணைப்பில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டீர்கள்.

கலந்துரையாடலில் கலந்து கொள்ள உங்கள் WhatsApp இலக்கத்தினை இலங்கை நேரம் 20.07.2025 ஞாயிறு மாலை 6.30 க்கு முதல் 1 416 821 8390 என்ற இலக்கத்திற்கு உங்கள் WhatsApp இலக்கத்தினை அனுப்ப வேண்டும். நன்றி.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026 புதன்கிழமை என்பதும் அன்றைய தினம் வியாவில் தீர்த்தோற்சவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026...

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா. 10.08.2026 திங்கள்கிழமை. நாளை செவ்வாய்கிழமை ஆடி அமாவாசை தினத்து தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறும் ரதோற்சவம்.

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா....

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ – ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்.

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605