காரைநகர் நீலிப்பந்தனை வீதி புனரமைப்பு கூட்டமும் தீர்மானங்களும்… 15.03.2026 இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் தீர்மானங்களும் சாரம்சமும்… தவிசாளர் அவர்களினால் விளக்கமாக கூறப்பட்டது.

காரைநகர் நீலிப்பந்தனை வீதி புனரமைப்பு கூட்டமும் தீர்மானங்களும்… 15.03.2026 இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் தீர்மானங்களும் சாரம்சமும்… தவிசாளர் அவர்களினால் விளக்கமாக கூறப்பட்டது.

அதன் பிரகாரம் 14 மில்லியன் ரூபா செலவில் நீலிப்பந்தனையில் தொடங்கி மானாலிபிட்டி ஊடாக மல்லிகை சேவகர் கோயில் வீதி வழியாக சடையாளி பள்ளிக்கூடம் வாயிலாக அமைக்கப்படுவதுடன், மருதடி நீலிப்பந்தனை வீதி அமைக்கப்படுவதுடன் மேற்கொண்டு நீலிப்பந்தனை அம்பாள் ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு கோயிலுக்கும் கேணிக்கும் இடைப்பட்ட பகுதி ஊடாக செல்லுகின்ற புதுறோட்- நீலிப்பந்தனை இணைப்பு வீதியான விடுபட்ட 75 M நீளமான வீதியும் புனரமைக்க ஆவண செய்யப்படும் எனவும் பொதுக்கூட்ட முடிவில் தவிசாளர் அவர்களால் இன்றைய கூட்டத்தின் தீர்மானங்களாக அறிவிக்கப்பட்டது.

இன்றைய பொதுக்கூட்டத்தின் போது கலந்து கொண்டவர்கள் வடிகால் வாய்க்கால் அமைப்புக்கு தேவைப்படும் நிலத்தினை தமது சொந்த காணிகளில் இருந்து பிரதேச சபைக்கு விட்டுக்கொடுப்பதாகவும் சம்மதம் தெரிவித்தனர்.

கூட்டம் இனிதே சுமூகமாக நிறைவு பெற்றது.

எது நடந்ததோ அது நன்றாகவே நடைபெற்றது, எது நடைபெறவுள்ளதோ அதுவும் நன்றாகவே நடைபெறும்.

கூட்டத்தின் சாராம்சத்தினை கீழ்வரும் நேரடி ஒளிபரப்பின் மூலம் முடிவுவரை பார்வையிட்டு அறிந்து கொள்ளவும்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

காரைநகர் சுற்றுவட்ட வீதியை புனரமைக்கும் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வில் கெளரவ போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரட்நாயக்கா கலந்து கொண்டு பணிகளை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

காரைநகர் மணற்காடு கும்பநாயகி வேட்டை திருவிழா

Leave a Reply