காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய அடியவர்களிற்கான அறிவித்தல். ஆலய திருப்பணி கலந்துரையாடல் அழைப்பு

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய அடியவர்களிற்கான அறிவித்தல்.

நாளை திங்கள்கிழமை 06.07.2026 மாலை 5 மணிக்கு நீலிப்பந்தனை அம்பாள் ஆலய திருப்பணி தொடர்பான கலந்துரையாடல் ஆலய முன்றலில் நடாத்துவதற்கு ஆலய அறங்காவலர் திருமதி.செல்வராணி சோமசேகரம்பிள்ளை அவர்கள் அழைக்கின்றார்.

நீலிப்பந்தனை அம்பாள் ஆலய வசந்த மண்டப திருப்பணிகளை பூர்த்தி செய்வது, 2027ம் ஆண்டு கும்பாபிஷேகம், அலங்கார உற்சவத்தை மீளநடாத்துவது தொடர்பாக தீர்மானிப்பது தொடர்பாகவும் மற்றும் பல விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடுவதுடன், இவை தொடர்பாக ஆலய அடியவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும் வசதியாக இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.

நீலிப்பந்தனை அம்பாள் அடியவர்கள் பலரும் தற்போது ஊர் திரும்பியுள்ள நிலையில் இக்கலந்துரையாடல் அவசரம் அவசரமாக கூட்டப்படுகிறது. நேரகாலத்தை கருத்தில் கொள்ளாது நாளை திங்கள்கிழமை 06.07.2026 மாலை 5 மணிக்கு கலந்து கொள்ளவும். ஆலய அறங்காவர் திருமதி. செல்வராணி சோமசேகரம்பிள்ளை அவர்கள் கலந்து கொள்கிறார்.

நன்றி.

More From Author

ஈழத்துச் சிதம்பரம் கும்பாபிஷேகம் – கும்பம் வெளிவீதி வருகை

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.