நீலிப்பந்தனை அம்பாள் ஆலய தர்மகர்த்தா திருமதி சோமசேகரம்பிள்ளை செல்வராணி அவர்களின் தலைமையில் 06.07.2026 திங்கள்கிழமை பி ப 5.30 மணியளவில் கோவில் முன்றலில் அம்பாளின் கும்பாபிஷேக திருப்பணி செயற்குழு அங்கத்தவர்களை அம்பாள் அடியவர்கள் கலந்துரையாடலின் போது தெரிவு செய்தனர்.
தலைவர் ஆதீனகர்த்தா திருமதி சோமசேகரம்பிள்ளை செல்வராணி.
உபதலைவர் மு.சு. வேலாயுதப்பிள்ளை
செயலாளர் சு. மோகன்ராஜ்
உபசெயலாளர் கு. ரமேஸ்குமார்
பொருளாளர் சி. திருக்குமார்
மற்றும் உறுப்பினர்களாக
க. ஜெயந்தன்,
சோ. ஞானாம்பிகை,
நா. பாலகிருஷ்ணன்,
S. வைத்திலிங்கம்,
கலாநிதி வீரமங்கை ஸ்டாலினா யோகரட்ணம்.
இ. உமாசுசி
திரு.சிவரூபன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாளிற்கு கும்பாபிஷேகம் நடைபெற்று அடுத்த வருடம்(2027) பன்னிரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. அத்துடன் மூலஸ்தானத்தில் முக்கியமான திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதுடன், நிறைவேறாத நிலையில் உள்ள மற்றைய சில திருப்பணிகளும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு குடமுழுக்கு நடாத்துவதற்கான தேவைகளும் ஏற்பட்டுள்ளது.
அதற்காக ஆதீனகர்த்தாவிற்கு உதவியாக ஆதீனகர்த்தாவின் நேரடி கண்காணிப்பில் மேற்படி கும்பாபிஷேக செயற்குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், கும்பாபிஷேக திருப்பணிக்காக தனியானதொரு வங்கி கணக்கும் ஆதீனகர்த்தா மற்றும் திரு.S.திருக்குமார் இணைந்து 07.07.2026 அன்று BOC இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
06.07.2026 அன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட நீலிப்பந்தனையை பூர்வீகமாக கொண்டவரும் இலண்டனில் வசிப்பவருபான திரு. நாகமணி சண்முகநாதன் ராஜ் அவர்கள் வடக்கு வீதியில் எழுந்தருளி வாயில் வரையாக அமைந்துள்ள சுற்று கொட்டகை, மடைப்பள்ளி, வாகனசாலை என்பவற்றை புனரமைத்து ஒரே கூரையின்கீழ் முடித்து வளங்க தனிப்பட்ட அனுசரணை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
அத்துடன் கலந்து கொண்ட மற்றைய அடியவர்கள் சிலரும் தனிப்பட்ட உபயமாக மற்றைய சில திருப்பணிகளை பொறுப்பேற்க அனுசரணை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
மேலும் ஆதீனகர்த்தாவிற்கு உதவியாக உள்ள குழுவினர் இரண்டொரு கிழமைகளில் மொத்தமாக செய்யப்பட வேண்டிய திருப்பணிகளை கண்டறிந்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக உத்தேச செலவுகளை அறியப்படுத்துவார்கள் எனவும், மேலும் அடியவர்கள் அவற்றினை தேர்வு செய்து சொந்த உபயமாக பொறுப்பேற்று அனுசரணை வழங்க முன்வரவேண்டும் எனவும் ஆதீனகர்த்தா அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
06.07.2026 கோயில் முன்றலில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில வருமாறு.:


