‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’
‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்.
இரண்டு ஆண்டுகளிற்கு ஒருமுறை நடைபெறும் ‘காரைநகர் சேவையாளர்’ கெளரவம் 2025, 2026ம் ஆண்டுக்கான சேவையாளர் கெளரவம் 03.01.2027 ஞாயிற்றுக்கிழமை அன்று காரைநகரில் நடைபெறவுள்ளது.
‘வாழும் போதே வாழ்த்துவோம்’ என்பதற்கு இணங்க ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com காரைநகர் அபிவிருத்தி சபையுடன் இணைந்து கடந்த நான்கு தடவைகள் மொத்தம் 41 காரைநகர் சேவையாளர்கள் கெளரவிக்கப்பட்டுள்ளார்கள்.
ஐந்தாவது தடவையாக நடைபெறவுள்ள ‘காரைநகர் சேவையாளர் கெளரவம்’ நிகழ்வின் போது ஊரிற்கும், மண்ணிற்கும், மக்களிற்கும் தமது பணிகளிற்கு அப்பால் சென்று பணியாற்றியவர்கள் என நீங்கள் கருதும் நபர்களை காரணத்துடன் தெரிவியுங்கள். அவர்களை வாழும் போதே வாழ்த்துவோம். கெளரவிப்போம்.
அரச உத்தியோகத்தர்கள், அரசியல்வாதிகள், பொதுப்பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், சமய பணியாளர்கள், வர்த்தகர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், கலைஞர்கள் என எத்துறையாக இருந்தாலும் ஊர் நன்மைக்காக தமது சாதாரண பணிகளிற்கு அப்பால் சென்று தன்னலமற்ற வகையில் சேவை மனப்பாண்மையுடன் ஊர் மக்கள் நலனில் அக்கறையுடன் செயற்பட்டவர்களை அறியத்தாருங்கள்.
காரை மண்ணிற்காக பணியாற்றியவர்கள் அல்லது பணியாற்றுபவர்கள் எவ்வூரவர்களாக இருந்தாலும் அவர்களையும் அடையாளப்படுத்துவோம்.
வெறுமனே பெயர்களை மட்டுமல்ல அவர்களது பணிகளை சேவைகளை காரணத்துடன் அறியத்தாருங்கள். பெருமைகளை பெருமைப்படுத்துவோம்.
முகநூலின் உட்பக்கமான messenger ஊடாகவோ அல்லது karainewstheesan@gmail.com என்ற இமெயில் ஊடாகவோ அறியத்தாருங்கள். பரிசீலனை செய்யப்பட்டு 03.01.2027 அன்று நடைபெறவுள்ள ‘காரைநகர் சேவையாளர் கெளரவம்’ நிகழ்வின் போது கெளரவிப்போம்.


