ஊடகங்கள் கையில் தங்கி உள்ளதா இலங்கையின் எதிர்காலம்.. அல்லது உங்கள் கைகளிலா…!

ஊடகங்கள் உண்மையை தான் சொல்கின்றன, ஆனால் ஒவ்வொரு ஊடகங்களும் அந்த ஊடகத்திற்கு வியாபார ரீதியாக வருமானத்தை வழங்கும் கட்சிகள் அல்லது தனிப்பட்ட வேட்பாளர்களிற்கு சார்பான செய்திகளை மட்டுமே திரும்ப திரும்ப கூறி வருகின்றன. எனவே உங்களிற்கு விரும்பிய ஊடகமாக எது இதுவரை இருந்தாலும் மற்றைய ஊடகங்களில் வரும் செய்திகளை விபரங்களை சில நிமிடங்களாவது செவிமடுங்கள்.

இலங்கையில் இருந்து செயற்படும் முன்னணி ஊடகங்கள் சிலவற்றிலும் உள்ள வித்தியாசத்தை நீங்களே கண்டு கொள்வீர்கள்.

ஒரு ஊடகத்தில் சொல்லப்படும் முக்கிய செய்தி ஒன்று மற்றைய ஊடகத்தில் எவ்வாறு தட்டிக்கழிக்கப்படுகின்றது என்பதையும், இன்னொரு ஊடகத்தில் தட்டிக்கழிக்கப்படும் ஒரு செய்தி மற்றொரு ஊடகத்தில் ஏன் முதன்மை பெறுகின்றது என்பதனையும் ஊடகங்களையும் கடந்து உங்கள் சிந்தனைக்கு உட்படுத்துங்கள்.

அரசியல் எல்லோர் வாழ்க்கையிலும் உண்டு. உங்கள் வோட்டு மிகவும் முக்கியமானது.

ஒரே ஒரு ஊடகம்,

ஒரே ஒரு சிந்தனை என்று 2009 க்கும் 2024 க்கும் உள்ள கால வேறுபாடுகளை மறந்து விடாதீர்கள்.

அன்று உங்கள் தேவை என்ன..! இன்று உங்கள் தேவை என்ன..! சிந்தியுங்கள்.

வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகிறான். l ஆனால் வாசிக்கவே முடியாத சூழ்நிலைகளை கொண்டுள்ள உங்களில் பலர் தயவு செய்து செய்திகள் விபரங்களை வேறு வேறு ஊடகங்கள் ஊடாக அறிந்து கொள்ளுங்கள்.

உங்களிற்கு மிக விரும்பிய ஊடகமாக எது இருந்தாலும் அது உங்களை ஆட்கொண்டுள்ளது. அது தொலைக்காட்சியாக இருந்தாலும் வானொலியாக இருந்தாலும் பரவாயில்லை. எனவே நீங்கள் விரும்பிய ஊடகத்திற்கு அடுத்ததாக இருந்த ஊடகத்தை Nov 13 வரை செவிமடுத்துவிட்டு, Nov 14 உங்கள் வாக்குகளை செலுத்த செல்லுங்கள்.

இது தமிழீழத்திற்கான போராட்டமல்ல, 30 வருட போரிட்டத்தின் பின்னர் 15 ஆண்டுகள் பயன்ற்ற வாழ்க்கையின் பின்னர் தக்க வைப்பதற்கான தருணம்.

…. நானும் அரசியல்வாதி ஆகிவிட்டேன் பாருங்கள்…

யாருக்கு நீங்கள் வோட்டு போட வேண்டும் என்று சொல்லாமல் நீங்கள் யாருக்கு வோட்டு போட வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டேன்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

ஊர்ப்பணி ஆற்றிவரும் திரு.வே.சபாலிங்கம் அவர்களிற்கு ‘எனது ஊர் காரைநகர்’ இனிய அகவை தினவாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது

Dr.நடராஜா அவர்களின் தீர்க்கதரிசனம்! நூலக கட்டுமான பணிகளின் போது, 11 ஆண்டுகளிற்கு முன்னர் நட்ட மரம்…

Leave a Reply