நாளை ஞாயிற்றுக்கிழமை 28.09.2025 நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு அங்கத்தவர்களாக இணைந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்க..!
காரைநகர் அபிருத்தி சபை பொதுக்கூட்டம், அனைவரும் கலந்து கொள்க..!
நாளை ஞாயிற்றுக்கிழமை 28.09.2025 நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு அங்கத்தவர்களாக இணைந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்க..!
ஆனால் அன்றைய தினம் அங்கத்தவர்களாக இணைந்து கொள்பவர்களிற்கு அன்றைய தினம் நடைபெறும் உத்தியோகபூர்வ வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளும் உரிமை இல்லை, நிர்வாகத்தில் பங்கெடுக்கும் உரிமையும் இல்லை. ஆனால் காரைநகர் அபிவிருத்தி சபையில் அங்கத்தவராக இணைந்து கொள்ள என்றும் எப்போதும் உரிமைகள் உண்டு. அங்கத்தவராக இணைந்து கொள்ள முன்வரும் எவரையும் தடுக்கும் உரிமை நிர்வாக சபை எவருக்கும் இல்லை. எனவே அன்றைய தினமே அங்கத்தவராக இணைந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் பார்வையாளராக பங்கேற்றுக்கொள்ள முடியும்.
காரைநகர் அபிவிருத்தி சபையில் நிர்வாக அங்கத்தவராக இணைந்து கொண்டு நிர்வாகத்தில் இடம்பெறவேண்டுமாயின் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் அங்கத்தவராக இருத்தல் வேண்டும் அல்லது ஆயுட்கால அங்கத்தவராக இருத்தல் அவசியம். ஆனாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இன்றைய மற்றும் எதிர்கால வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் அன்றைய தினமும் அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள முடியும் என்பதும் அன்றைய பொதுக்கூட்டத்தில் கலந்து பார்வையிடலாம் என்பதும் விதி எனவே யாரும் கலந்து கொள்ள முடியாது என கருத இடமில்லை. நன்றி.


Leave a Reply
You must be logged in to post a comment.