காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக ‘எனது ஊர் காரைநகர்’ இடர்கால கொடுப்பனவும் உதவிகளும் வழங்கப்பட்டன.
காரைநகர் அபிவிருத்தி சபை திரு.தே.பரணீதரன் தலைமையில் இடர்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களிற்கு உடனடி உதவிகளை வழங்க தீர்மானித்திருந்தது. அதற்கென சபையின் ஐந்து இலட்சம் ரூபாய்களை வழங்கியதுடன், ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாகவும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. ஊர் உறவுகளிற்கு சூழ்நிலை அறிந்து உதவும் வகையில் சிலர் நேரடியாக அபிவிருத்தி சபைக்கு உதவி வழங்கியிருந்தார்கள்.
அவர்களுடன் இணைந்து ‘எனது ஊர் காரைநகர்’ தொடர்புகள் ஊடாகவும் வழங்கப்பட்ட நிதியினையும் பெற்றுக்கொண்ட காரைநகர் அபிவிருத்தி சபையினர், செயலாளர் பொ.பரந்தாமன், பொருளாளர் வே.செல்வராசா ஆகியோர் நேரடியாக பயனாளிகளை சந்தித்து இடர்கால பொதிகளை வழங்கியுள்ளனர். பொதிகள் ஒவ்வொன்றும் ரூபா 6,250 பெறுமதியானவை.
‘எனது ஊர் காரைநகர்’ மூலமாக வழங்கப்பட்ட பொதிகளை தகுதியான பயனாளிகளை சென்றடையவும் வழங்கப்படுவதை உறுதிசெய்து கொள்ளவும் உதவிகளை பெற்றுக்கொள்ள திராணியற்றவர்களை இனம் காணவும் அவ்வவ்பகுதி கிராம சேவகர்கள் உதவிகளை அபிவிருத்திச்சபை பெற்றுக்கொண்டுள்ளது.
இத்தர்மப் பணி ஊடாக படம் காட்டுவது முக்கியமல்ல ஆனாலும் ‘எனது ஊர் காரைநகர்’ மீது நம்பிக்கை கொண்டு , விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு அமைய காரைநகர் அபிவிருத்தி சபைக்கான உதவிகளை வழங்கியவர்களிற்காகவும் காரைநகர் அபிவிருத்தி சபை இடர்காலத்தில் ஆற்றியபணிகளை வெளிக்கொணரும் வகையிலும் இந்த விபரங்கள் வெளியிட்படுகின்றது.
அத்துடன் 12.10.2025 அன்று சடையாளி கேணி இறைத்து துப்பரவாக்கப்பபட்டதன் பின்னர் மிகுதியான நிதி 22,085 ரூபாய்களும் காரைநகர் அபிவிருத்தி சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்வன திருந்த செய்வோம். நம்பிக்கை நாணயம் ரொம்ப முக்கியம் கண்டியளோ.












