காரைநகர் இந்துக்கல்லூரிக்கு தற்போது தேவையாக உள்ள பெளதீக வளம் ” ஆசிரியர் மாணவர் சிற்றுண்டிச்சாலை” (cafeteria).
இதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், உத்தேச மதிப்பாக 10 இலட்சம் ரூபாய்கள் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் இதனை 1973 பொன்னகவை மாணவர்களில் ஒருவரும் கொழும்பில் பொறியியலாளருமான திரு.இராமச்சந்திரன் விக்கினேஸ்வரன் அவர்கள் மேற்பார்வையில் 7 இலட்சம் ரூபாய்களிற்கு உட்பட்ட வகையில் நிறைவேற்றலாம் எனவும், பாடசாலையின் மற்றுமொரு வளவினுள் உள்ள பனை மரங்களை பெற்றும், box bar பயன்படுத்தியும் பாடசாலையின் வடக்கு வளாக சயம்பர் சிலை பக்கமாக உள்ள கட்டிடத்தில் இருந்து சாய்வாக கோப்புசம் இட்டு 25 * 17 அடி சிற்றுண்டிச்சாலை அமைக்க முடியும் எனவும் பொறியியலாளர் திரு.இ.விக்கினேஸ்வரன் அவர்கள் மதிப்பிட்டுள்ளார்.
1973 பொன்னகவை மாணவர்களின் இரண்டு வகுப்பறை கட்டிடங்களிற்கு பின்னர் 1974, 1975 பொன்னகவை மாணவர்கள் ஒத்துழைப்பு நல்கினால் இதனை வெகுவிரைவில் அமைத்துக்கொடுக்க முடியும்.
1973 பொன்னகவை மாணவர்களினாலும் இதற்கான நிதி உதவி வழங்கப்படும்.
காரை இந்து பழைய மாணவர் சங்கத்தினருடன் இணைந்து இதனை நிறைவேற்ற 1974 மற்றும் 1975 பொன்னகவை அணியினர் செயற்பட மேற்படி அணியினர் சார்பாக ஒருங்கிணைக்கவும் சக மாணவர்களை தொடர்பு கொண்டு பழைய மாணவர் சங்கத்தினருடன் இணைந்து செயற்படவும் 1974,1975 பொன்னகவை பழைய மாணவர்களை அழைக்கிறோம்.
1973,1974,1975 பொன்னகவை மாணவர்கள் அன்பளிப்பாக அமையவுள்ள கல்லூரியின் சிற்றுண்டிச்சாலை காரை இந்து பழைய மாணவர் சங்கத்தினர் ஊடாக மட்டுமே நிறைவேற்றப்படும். அனைத்து நிதி உதவிகளும் பழைய மாணவர் சங்கத்தினரின் வங்கி கணக்கிற்கு தனித்தனியாக வரவு வைக்கப்பட்டு இப்பணிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.
இப்பணியை ஆரம்பித்து வைக்க ‘காரை இந்து சிற்றுண்டி சாலை’ என்னும் சமூகவலை தொடர்பு பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் உட்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் இணைந்து கொள்ள தங்களது தொலைபேசி இலக்கத்தையும் தாங்கள் வசிக்கும் நாட்டினுடைய தொலைபேசி குறியீட்டினையும் அறியத்தருவதன் ஊடாக நீங்களும் இணைந்து கொண்டு பங்காளர்களாவதுடன், கட்டிட பணி விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.
நாம் படித்த பாடசாலையின் தேவைகளை நாம் நிறைவேற்றாது போனால் வேறு எவராலும் நிவர்த்தி செய்ய முடியாது. நன்றி.



