என் கடன் பணி செய்து கிடப்பதே…’

என் கடன் பணி செய்து கிடப்பதே…’

நம் கடம்பனை பெற்றவள் பங்கினன்

தென் கடம்பை திருக்கர கோயிலான்

தன் கடன் அடியேனையும் தாங்குதல்

என் கடன் பணி செய்து கிடப்பதே…

பொருள்: அப்படி இறைவனுக்கு கடமையை சொன்ன நாவுக்கரசர், அடிவர்களுக்கும் ஒரு கடமை உண்டு என்று சொல்கிறார். அது, எப்போதும் பணிசெய்வது. பணி செய்த பின் அதற்கு என்று கூலி எதுவும் எதிர் பார்க்காமல் சும்மா கிடப்பது. அது அடியவர்களின் வேலை. திருத் தொண்டு புரிவது.

பொதுப்பணியில் கல்வி, சுகாதாரம், விளையாட்டு, வாழ்வாதாரம், ஆன்மீகம், மனிதாபிமானம், நட்பு, தானம், தர்மம் இவற்றுடன் அரசியலிலும் எனது தனிப்பட்ட கருத்துக்களை தனித்தே சொந்தமாக சொந்த முகநூலில் தெரிவித்து வந்துள்ளேன். அரசியல் எனது முழுநேர பணி அல்ல. அரசியல் ரீதியாக 06.05.2025 பிரதேச சபை தேர்தலிற்கு பின்னர் வென்றவர்களும் முயற்சி செய்தவர்களும் இனிவரும் காலங்களில் அதற்கான பணிகளில் ஈடுபடுவார்கள்.

வென்றவர்களும் முயற்சி செய்தவர்களும் காரை மக்களிற்கான சேவைகளையும் உதவிகளையும் விருப்பு வெறுப்புகளிற்கு அப்பாற்பட்டு கட்சி பேதங்களிற்கு அப்பாற்பட்டு நிறைவேற்றுவார்கள் என நம்புவோம். பிரதேச சபை தேர்தல் என்பதும் கட்சிகளிற்குட்பட்ட தேசிய கொள்கைகளிற்கும் உட்பட்டதும் அல்ல.

ஒவ்வொரு பிரதேசங்களிற்கும் தனிப்பட்ட தேவைகளும், அடிப்படை காரணிகளும் வேறுபட்டவை. அரசியல் என்பது பொதுப்பணியில் ஒரு அங்கமே. அரசியல் மட்டும் பொதுப்பணி அல்ல. தொடர்ந்து அரசியலில் மட்டும் பயணித்து அரசியல் ஊடாக மட்டும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என நம்புகின்றவர்கள் தொடர்ந்து முழுநேர அரசியல்வாதிகளாக முயற்சிக்கலாம்.

பிரதேச சபை தேர்தல் நிறைவு பெற்றது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அதனை ஏற்றுக்கொண்டு, இனி அவரவர் கடமைகளை அவரவர்கள் செய்வதற்கான நேரம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என நம்புவோம். வெற்றி பெற்றவர்கள் மேலும் மக்கள் ஆதரவை பெறவேண்டும், முயற்சி செய்தவர்கள் தொடர்ந்தும் மக்கள் பணியில் ஈடுபட்டு தமது ஆதரவை பெற்று அனுபவம் பெற்ற அரசியல்வாதிகளாக அடுத்த பிரதேச சபை தேர்தலில் வெற்றிபெறவும் மக்களிற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபடவும் வாழ்த்துகிறேன்.

அன்பே சிவம்.

More From Author

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் வேள்வியை முன்னிட்டு விளக்கு வைக்கும் நிகழ்வு 09.05.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறும்.

நீலிப்பந்தனை அம்பாள் விளக்கு… இன்று 09.05.2024 வெள்ளிக்கிழமை.

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.