காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் வேள்வியை முன்னிட்டு விளக்கு வைக்கும் நிகழ்வு 09.05.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறும்.
காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் வேள்வியை முன்னிட்டு விளக்கு வைக்கும் நிகழ்வு 09.05.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறும்.
தொடர்ந்து 16.05.2025 வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு பொங்கலும் மறுநாள் 17.05.2025 காலை வேள்வியும் இடம்பெறும். துர்க்கை அம்பாள் பக்த கோடிகள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக்கொள்ளவும் வேள்வியின் போது தங்களது உபயமாக அபிஷேகம், படையல், மற்றும் one time நித்தியபூசை நிரந்தர வைப்புக்கு தங்களாலான நிதியுதவியை வழங்க ஆதீனகர்த்தாக்கள் சார்பாக நியமிக்கப்பட்ட நிர்வாக செயற்பாட்டாளர் திரு.பாலகிருஸ்ணன் சிவறைஞ்சன் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும். +94 (77) 469 0289, WhatsApp ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம்.
நீலிப்பந்தனை அம்பாள் ஆலய நிர்வாகம் ஆதீனகர்த்தாக்களான திரு.அருளையா ஆனந்தகுமாரசாமி, திருமதி.சோமசேகரம்பிள்ளை செல்வராணி, சோமசேகரம்பிள்ளை பிறேம்குமார் ஆகியோரால் நேரடியாக நியமிக்கப்பட்ட செயற்படுத்தும் நிர்வாக உறுப்பினர்களது கைங்கரியத்தினால் நித்தியபூசை மற்றும் விசேட தினங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படவும் பக்த கோடிகளின் ஆதரவை வேண்டி நிற்கிறார்கள் நிர்வாகத்தினர்.
ஆதீனகர்த்தாக்களின் நேரடி நிர்வாகத்தில் இக்கோயில் நிர்வாகம் நடைபெற்று வந்தாலும், நிர்வாக செயற்பாடுகளை சிறந்த முறையில் நிர்வகிக்கவும், பக்த கோடிகள் வளங்கும் மாதாந்த நித்திய பூசை உபயம், விசேட தினங்களிற்கான உபயம் மற்றும் அனைத்து நிதி சம்பந்தப்பட்ட அன்பளிப்புக்களும் நிர்வாகத்தினால் பதிவு செய்யப்படுவதுடன் ஜனவரி 01 முதல் – டிசம்பர் 31 வரையான காலப்பகுதிக்கு ஒவ்வொரு வருடமும் கணக்கறிக்கைவெளியிடப்படும்.
மாதாந்த நித்திய பூசைகளிற்கான ஒருங்கமைப்பும், நாளாந்த பராமரிப்புகளிற்கு பின்னர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலயம் புத்தொளி பெற்றுள்ளது. இன்றைய தினம் படமாக்கப்பட்ட கோயில் சுற்றுப்புற காணொளியினையும் படங்களையும் காணலாம்.







Leave a Reply
You must be logged in to post a comment.