இல்லை என்று சொல்லாமல் ஒருவர் இன்னொருவருக்கு கொடுக்கக்கூடியது இரத்தம்.

இல்லை என்று சொல்லாமல் ஒருவர் இன்னொருவருக்கு கொடுக்கக்கூடியது இரத்தம். இறைக்க இறைக்க கிணறு ஊறுவது போல எமது உடம்பிலும் இரத்தம் மீண்டும் ஊற்றுப்பெறுகிறது. இரத்தம் கொடுப்பதால் எந்தவிதமான தீமைகளும் கொடுப்பவருக்கு ஏற்படப்போவதில்லை.

ஆனாலும் எல்லோராலும் இரத்தம் வளங்கவும் முடியாது.

முதல் முறையாக இரத்தம் வளங்கும் போது 50 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். 50 வயதிற்கு முன்னர் ஒருவர் இரத்தம் வளங்கியிருந்தால் அவர் 60 வயது வரை நான்கு மாத த்திற்கு ஒருதடவை இரத்தம் வளங்க முடியும்.

குறிப்பிட்ட சில நோய்கள் முன் எப்போதாவது வந்திருந்தாலும் இரத்தம் வளங்க முடியாது. உதாரணமாக மஞ்சள்காமாலை.

50 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒருமுறை இரத்தம் வளங்க முயற்சிக்கவும். அதனால் பலவித நன்மைகளை அடைவீர்கள். கல்வியறிவு வளர்ச்சி பெற்ற வெளிநாடுகளில் இரத்த வங்கிகளில் இரத்தத்திற்கு தட்டுப்பாடுகள் இல்லை. காரணம் எந்தவித அறிவித்தல்களோ அல்லது விளம்பரங்களோ இன்றி மக்கள் அவ்வப்போது இரத்தம் வளங்கி வருகின்றார்கள். ஆனாலும் சில அரிதான குறூப் இரத்தங்களிற்கு மட்டுமே தட்டுப்பாடு இருந்து வருகிறது.

ஆனால் இலங்கையில் குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் வைத்தியசாலைகளில் தேவையானளவு இரத்தம் இரத்த வங்கிகளில் கையிருப்பில் இல்லை எனவும், பல சத்திர சிகிச்சைகள் இரத்த பற்றாக்குறை காரணமாக தாமதிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

அந்த வகையில் “எனது ஊர் காரைநகர்” ஊடாக சேவையாளர் கெளரவம் பெற்றவரான திரு.வே.செல்வராசா மற்றும் இருவர் என காரைநகரை சேர்ந்த மூவர் இலங்கை தேசிய இரத்த வங்கியினால் உலக இரத்ததான நாளான June 14 இனையொட்டி கெளரவிக்கப்பட்டனர்.

இதுவரை 30 தடவைகளிற்கு மேல் இரத்தம் வளங்கியவர்களை நாடு முழுவதில் இருந்தும் கெளரவிக்கப்பட்டனர். திரு. வே. செல்வராசா அவர்கள் கடந்த இருபது வருடங்களில் 50 தடவைகளிற்கு மேற்பட்டளவில் இரத்த வங்கிக்கு இரத்தம் வளங்கியுள்ளார் எனவும், வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த காலங்களில் தேவையேற்படும் போதெல்லாம் அவசர நிலைகளை கருத்தில் கொண்டு பெறுமதியான உயிர்களை காப்பாற்றவும் குருதி வளங்கியுள்ளார் எனவும் அன்று முதல் இன்றுவரை திரு.வே.செல்வராசா அவர்களை நன்கு அறித்த பிரபல வைத்தியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

“எனது ஊர் காரைநகர்” சார்பாகவும் காரைநகர் பிரதேச செயலகம் நடாத்திய இரத்ததான முகாமிற்கு கடந்த இரண்டு ஆண்டுகள் அனுசரணை வளங்கியதோடு தொடர்ந்தும் எமது ஊரில் இரத்த தானம் வளங்குவதை ஊக்குவிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் “எனது ஊர் காரைநகர்” செயற்படும் என்பதனையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

It is in you to give…! கொடுப்பவரும் பெறுபவரும் நன்மையடையும் ஒரு செயற்பாடு. குருதிக் கொடை.

மேலே இதுவரை எழுதியதை கிரகித்துக்கொண்டவர்களிற்கு ஒரு கேள்வி எழலாம். அவ்வாறாயின் தீசன் திரவியநாதன் எத்தனை தடவைகள் இரத்தம் வளங்கினார்… என்று…

அது ஒரு பெரிய கதை… 1990 களில் இந்தியா தமிழ்நாடு, சென்னை வடபழனியில் தொடங்கி நீலிப்பந்தனை கெனடி விஜயரத்தினம் வரை நீண்டு போன கதை.

1990ம் ஆண்டு உயிர் பிழைக்க ஓடிய நான் சென்னை வடபழனியில் தங்கியிருக்கிறேன். வெளிநாடு செல்வதற்காக முகவர் ஒருவரை சந்திக்க திருவான்மியூரில் அன்று இலங்கையர்களிற்கு பிரபலமான Eagle Lodge இற்கு செல்கிறேன். அங்கே எதிர்பாராத விதமாக குட்டிக் கிருபாவை காண்கிறேன். அவர் சொல்கிறார் கெனடியும் சென்னையில் தான் இருக்கிறார் என்று. அன்றே சென்னை மாம்பலத்தில்(மாம்பலம் என்பது சென்னையில் தி.நகரிற்கு அண்மையில் உள்ள இடம்) கெனடி வீட்டிற்கு கூட்டி செல்கிறார்.

வெளிநாடு செல்வதற்கான பயணம் கைகூடி வரவில்லை. 18 மாதங்கள் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. வடபழனி AVM இல் இருந்து K.K.நகர் வீதியூடாக சூரியன், சந்திரன் தியேட்டர் முன்பாக சென்று கெனடி இருந்த மாம்பலம் வீட்டிற்கு ஆரம்பத்தில் சைக்கிளில் செல்வேன். வாடகை சைக்கிள். வடிவேலு காமடியில் வருவது போன்று வாடகைக்கு எடுத்த சைக்கிளை வாடகைப்பணம் கட்ட முடியாத நிலையில் மாதக்கணக்கிலும் வைத்திருந்திருக்கிறேன். பின்னர் ஒரு கட்டத்தில் வாடகை சைக்கிளும் எடுக்க முடியாத நிலையில் நடந்து செல்வேன்.

அவ்வாறு ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் ஒரு சில நாட்கள் தொடர்ந்து நான் கெனடியை காண செல்லவில்லை. சில நாட்கள் கழித்து கெனடி என்னைக்காண வருகிறார். நான் தொடர்ச்சியான காய்ச்சலால் படுக்கையில் உள்ளேன். எனது கண் முழுவதும் மஞ்சளாக, எனது உடம்பும் மஞ்சளாகத் தொடங்கியிருந்ததை அவதானித்ததும் நான் தங்கியிருந்த அறைக்கு கீழ் இருந்த 10 ரூபா டாக்டரிடம் கூட்டி செல்கிறார். மஞ்சள் காமாலை என்பதும் முற்றிய நிலையில் பசி, தாகம் இன்றி இருந்ததும் நோய் கடுமை என்பதையும் உணர்கிறேன். மஞ்சள் காமாலை நோய்க்கு ஆங்கில மருத்துவம் இல்லாத நிலையில் சித்த மருத்துவர் மூலம் கீழ்காய் நெல்லி மூலம் பெறப்பட்ட குடிபானம் மூலமாக விதி பலப்பாக இருந்த காரணத்தினால் நலம் அடைந்தேன்.

அதன் பின்னர் ஒருவழியாக கனடா வந்தேன். இரத்தம் கொடுத்தேன். இரத்தம் கொடுத்த மறுநாள் என்னை தொடர்பு கொண்டார்கள், எனக்கு இரத்தத்தில் Hepatitis உள்ளதாகவும், குடும்ப வைத்தியரை சென்று பார்க்குமாறும் அறிவுறுத்தினார்கள். குடும்ப வைத்தியர் Hepatitis என்றால் என்ன என்பதனையும், அதன் விபரங்களை புரிய வைத்தார். மச்சள காமாலை நோய் வந்தவர்கள் இரத்தத்தில் Non active ஆக Hepatitis உயிர்வாழும் என்பதனையும், மஞ்சள் காமாலை என்பது Hepatitis வைரஸ் மூலமான ஒரு நோய் என்பதும், இன்னொருவருக்கு இரத்தம் வளங்க முடியாது என்பதனையும் அறிந்து கொண்டேன்.

இரத்தம் ஊடாக ஒரு பெரும் கதையையும் அறிந்து கொண்டிருப்பீர்கள். மீண்டும் ஒருமுறை வடபழனியும், மாம்பலமும், 18 மாத வாழ்க்கையும் என் கண் முன்னேயும் வந்து சென்றது.

Facebook இலும் Youtube இலும் பல மணி நேரம் செலவிட்டு நிமிடத்திற்கு பத்து தகவல்களை பெற்று மூளையை கூழாக்கி கொள்பவர்களிற்கு மத்தியில் பத்து நிமிடமாக இதை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் சிந்தனையாளராகத்தான் இருப்பீர்கள்.

திரு.வே. செல்வராசா அவர்களை வாழ்த்த மறந்து விடாதீர்கள். நன்றி.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

ஈழத்து சிதம்பரம் எனப்போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாவது ஆண்டு நிறைவுபெறவுள்ள நிலையில் இன்னமும் என்ன திருப்பணி நடக்கிறது..?

கனடா ஸ்காபுரோ நகரில் CTR தமிழ் வானொலியின் நட்சத்திர கலை விழா. 29.06.2025

Leave a Reply