காரைநகர் சிவபூமி என்றும், காரைநகரிற்குள் Hotel, Restaurant மற்றும் வலந்தலை சந்தியில் உல்லாச விடுதி அமையக்கூடாது என்று வெளுத்து வாங்கியவர்கள், அந்த சிவபூமி என்ற பெயர் அமையக்காரணமாக விளங்கும் ஈழத்து சிதம்பரம் எனப்போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாவது ஆண்டு நிறைவுபெறவுள்ள நிலையில் இன்னமும் என்ன திருப்பணி நடக்கிறது..? அப்படி ஏதாவது நடைபெற்றால் அது எப்போது நிறைவு பெறும்..? அல்லது திருப்பணி தடைப்பட்டுள்ளதா…? அதற்கான காரணம் என்ன..? நிதியா… நிர்வாகமா.. ?
ஈழத்தின் புகழ்பெற்ற சிவத்தலங்களில் ஒன்றாக விளங்கும் காரைநகர் திண்ணபுரம் சிவனின் புனித தன்மையை சீரளித்து மூன்றாண்டுகளாக பாலாலயத்தில் பூட்டிவைத்து பூஜை செய்வது எந்த ஆகமத்தில் சரியானது என கூறப்பட்டுள்ளது என்றாவது யாருக்காவது தெரியுமா… அல்லது தெரிந்து கொள்ளவாவது முயற்சிக்கிறீர்களா… அல்லது பதில் தெரிந்தும் பொத்திக்கொண்டு இருக்கிறீர்களா…?
இதில் எதற்கேனும் விடை தெரிந்தால் அனைவரும் அறியும் வகையில் தெரியப்படுத்தினால், அது நீங்களும் உள்ளே இருக்கும் சிவனும் ஜீவனுடன் உயிருடன் இருக்கின்றது என்பதற்கான ஆதாரமாக விளங்கும்.
இயற்கை அழிவு அல்லது திருக்கோயில் முற்றாக அழிக்கப்பட்டு 100% விகிதம் மீளப்புனரமைப்பு நடைபெற்றால் மட்டுமே ஒரு வருடத்திற்கு மேல் சுவாமிகளை பாலாலயத்தில் வைத்திருக்க முடியும் என்பதும், மீள கும்பாபிஷேகம் நடைபெறும் பட்சத்தில் புதிய கோயிலாகவும், புனருத்தாபன குடமுழுக்கு அல்லாது புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு புதிய கோயிலுக்கான ஆகமவிதிப்படியான குடமுழுக்கு நடைபெறவேண்டும் எனவும், நூற்றாண்டுகள் பூஜிக்கப்பட்ட விக்கிரகங்களின் கீர்த்தியும் அருளும் விக்கிரகங்களை விட்டு அகர்ந்துவிடும் எனவும் தமிழ்நாடு தில்லை சிதம்பரத்தின் தில்லைவாழ் அந்தணர் நேரடியாக தெரிவித்தார்.
காரைநகர் மக்கள் நேரடியாக தில்லை சிதம்பரத்திற்கு சென்று தரிசித்து வருகிறார்கள். நீங்கள் அங்கு செல்லும் போது எமது காரைநகர் சிவன் கோயிலின் உங்களிற்கு தெரிந்த விடயங்களை கூறி தில்லைவாழ் அந்தணர்களிடம் கேளுங்கள். நம்பவே மறுக்கிறார்கள். தில்லைவாழ் அந்தணர்கள் பலநூற்றாண்டு காலமாக பரம்பரை வழி வந்த 450 குடும்பங்களில் இருந்து தற்போது பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரத்தின் நான்கு வீதிகளிலும் ஆகமத்தை கற்று அதன்வழி ஒழுகி தீவட்டி முதல் தீபாராத்தி வரை அவர்களே செய்து வருகிறார்கள்.
ஆண்டிஐயா, முருகேசு அவர்கள் வாழ்ந்த காலத்தில் எங்கள் ஊர் சிவன் கோயில் நிர்வாகத்தை பார்த்த எங்களில் பலர் இன்று இதனையும் பார்க்கிறோம். இதற்காகதானா அவர்கள் பாடுபட்டார்கள்….சோத்துக்காகவா…
திண்ணபுரம் சிவன்கோயிலில் தான் சுவாமிகளிற்கு படைக்கப்படும் நைவேத்தியங்களில் “உப்பு” சேர்ப்பதில்லை. ஏன் எதற்காக என்று இந்த கோயின் முன்னோர்களின் வரலாற்றை அறிந்து கொண்டாலாவது நல்லது நடக்கும்…!








