கலந்துரையாடல்..! 20.07.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(நேரம் பின்னர் அறியத்தரப்படும்)
காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பானது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக காரைநகர் அபிவிருத்தி சபை தற்காலிக நிர்வாக சபையினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த தற்காலிக நிர்வாக சபையினால் முழுமையாக இயங்க முடியாத நிலையில் பல செயற்பாடுகள் செயற்படுத்த முடியாத நிலையும் மக்களிற்கான புதிய திட்டங்கள், செயற்பாடுகளை காரைநகர் அபிவிருத்தி சபையினால் நிறைவேற்ற முடியாத சூழ்நிலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்கின்றது.
இதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே காரைநகர் பிரதேச செயலகத்தின் தலையீட்டினால் தற்காலிக நிர்வாக சபை ஏற்படுத்தப்பட்ட போதிலும் அங்கத்தவர்கள் மற்றும் காரைநகர் மக்கள் மற்றும் தற்காலிய நிர்வாக சபையின் அசமந்த போக்கினால் பிரதேச செயலகத்தினாலும் மேற்கொண்டு எவ்வித முடிவுகளிற்கும் வரமுடியாத சூழ்நிலையில், தற்காலிக நிர்வாக சபையினருடனும் அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் உதவியுடன் தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பாக கலந்துரையாடி சுமூகமான ஒரு முடிவினை பிரதேச செயலகத்திற்கு அறியப்படுத்துவதன் மூலம் பிரதேச செயலகம் அதற்கான தீர்வினை செயற்படுத்தும்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 20.07.2025 அன்று உள்நாடு, வெளியூர், வெளிநாட்டு காரை உறவுகள் சமூக வலைத்தளம் ஊடான சந்திப்பில் கலந்து கொண்டு தற்போதைய காரைநகர் அபிவிருத்தி சபையின் சூழ்நிலைகளை அறிந்து கொள்வதுடன் மேற்கொண்டு முழுமையான வகையில் காரைநகர் அபிவிருத்தி சபை செயற்பட இனியும் காலம் தாழ்த்தாது நடவடிக்கையினை மேற்கொள்ள ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நடைபெறவுள்ள சமூக வலைத்தளம் ஊடான கலந்துரையாடலில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது WhatsApp இலக்கத்தினை எனக்கு உடனடியாக அறியத்தரவும். ஏற்கனவே அறியத்தருபவர்கள் மட்டும் கலந்துரையாடலில் இணைத்துக்கொள்ளப்படுவீர்கள்.
ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடல் இடம் பெறும் இலங்கை நேரம் பின்னர் அறியத்தரப்படும்.
அதுவரை தங்களது WhatsApp தொடர்பு இலக்கத்தினை அறியத்தருவதன் மூலம் அறியத்தரும் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு WhatsApp Group ஒன்றினை ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னதாக தற்காலிகமாக ஆரம்பிக்க முடியும். நன்றி.
எனது WhatsApp இலக்கம் 1 416 821 8390.





