முத்தையாபிள்ளை சுப்பிரமணியம்பிள்ளை (மணியம்) | இறைவனடி 14-07-2025
“எனது ஊர் காரைநகர் ” karainews.com சார்பில் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாத்தியடையவும் பிரார்த்திப்போமாக!
காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட முத்தையாபிள்ளை சுப்பிரமணியம்பிள்ளை (மணியம்) அவர்கள் 14-07-2025 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற முத்தையாபிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும் மனோகௌரி அவர்களின் பாசமிகு கணவரும் நீலிப்பந்தனையை சேர்ந்த காலஞ்சென்ற மகேசன் மற்றும் இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும் மேகலா, துவாரகன், சிவனியா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை (முன்னைநாள் புகையிரத திணைக்கழம்), தவநிதி, தவமணி ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.
“எனது ஊர் காரைநகர்” karainews.com இன் நீண்டகால அபிமானியும் காரை மண்ணை நேசித்தவருமான அன்னாரின் ஆத்மா தில்லைக்கூத்தனின் திருவடிகளில் சென்றடைய இறைஞ்சுவோமாக. ஓம் சாந்தி.!



Leave a Reply
You must be logged in to post a comment.