நாள் : Monday, September 7, 2026
--:--:--
👁️
Awareness

கனடா காரை கலாசார மன்றம் தொடர்பான முக்கிய செய்தி..!

கனடா காரை கலாசார மன்றம் தொடர்பான முக்கிய செய்தி..!

17.07.2025 இன்று வியாழக்கிழமை கனடிய நீதிமன்றத்தில் நடைபெற்ற முக்கியமான வழக்கு விசாரணையின் போது வழக்கு தொடுனரும், 28.04.2024 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைவராக தெரிவு செய்யப்பட்டவருமான முத்து பொன்னம்பலம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வளங்கியதன் காரணமாகவும் பல பொய்களை கூறி நீதிமன்றத்தை பிழையான வகையில் செற்படுத்த முயன்றார்.

நீதிமன்றம் முத்து பொன்னம்பலம் மன்றத்தின் தலைவரா இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும், மன்றத்தின் இணையத்தளம் மற்றும் இமெயில் என்பன யாரால் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு தனக்கு அது பற்றி தெரியாது என்று பொய்யினையும், திரு. தவராசா சங்கரப்பிள்ளை, மற்றும் திரு.நடனசபேசன்(ரூபன்) நமசிவாயம் ஆகியோரிற்கு தான் அதுபற்றி தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

28.04.2024 அன்று முத்து பொன்னம்பலம் தலைவராக தெரிவு செய்யப்பட்டதையடுத்து அன்றைய தினமே மன்றத்தின் இணையத்தளம் மற்றும் மன்றத்தின் உத்தியோகபூர்வ இமெயிலான karainagar@gmail.com இன் password கேட்டுப்பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் அதனை இன்றுவரை செயற்படுதியும் நிறுத்தியும் வைத்திருப்பவர் முத்து பொன்னம்பலம் என்பது யாவரும் அறிந்த உண்மை.

கனடா காரை கலாசார மன்றத்தை இல்லாது ஒழிக்கவும், கனடா காரை கலாசார மன்றத்தை வைத்து கடந்த காலங்களில் பலவழிகளிலும் பிழைப்பு நடாத்தியவர்கள் முத்து பொன்னம்பலம் எனப்படும் கண்ணுக்கு காணாத ஒருவரை வைத்து நடாத்தி வரும் வழக்குகளும் தற்போது தற்காலிகமாக கனடா காரை கலாசார மன்றத்தின் பின்னடைவுகளிற்கு மத்தியிலும் கனடாவில் 27.07.2025 அன்று ஒன்றுகூடலை நடாத்த திட்டமிட்டுள்ளனர்.

அத்துடன் கனடா காரை கலாசார மன்றம் கோர்ட்டினால் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், கனடா காரை கலாசார மன்றத்திற்கு பதிலான ஒன்றுகூடலாகவும் கனடா வாழ் காரைநகர் மக்களிடத்தே பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

28.04.2024 அன்று முத்து பொன்னம்பலத்தை தலைவராக தெரிவு செய்து தம்மை செயலாளராக, பொருளாளராக, நிர்வாக சபை உறுப்பினர்களாக நியமித்துக்கொண்டவர்களே இன்று ஒன்றுகூடலிற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளதுடன் முத்து பொன்னம்பலத்தைக்கொண்டு கனடா காரை கலாசார மன்றத்தை நிரந்தரமாக முடிவிட்டதாகவும், ஒன்றுகூடலுக்கு வருமாறும் அழைத்து வருகின்றார்கள்.

முத்து பொன்னம்பலத்தை 28.04.2024 அன்று தலைவராக கொண்டு வந்தவர்கள் முத்து பொன்னம்பலத்தை வைத்து கனடா கரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தை நடாத்த முடியாதளவில், முத்து பொன்னம்பலத்தின் கோர்ட் கேசுகளை வைத்து கனடா காரை கலாசார மன்றத்தை நிரந்தரமாக மூடிவிட்டு 2015ம் ஆண்டுக்கு முன்னர் கனடா காரை கலாசார மன்றத்தை வைத்து தமது பிழைப்பை நடாத்தியவர்கள் தமது களவுகளையும் பொய்களையும் இல்லாது செய்வதற்காக கனடா காரை கலாசார மன்றத்தை இல்லாது ஒழிக்க கங்கணம் கட்டிக்கொண்டுள்ளார்கள் என்பது காலங்களைக்கடந்தும் உணர்த்தி வருகின்ற உண்மையாகும்.

தனிப்பட்ட ஒருசிலர் தமது தேவைகளிற்காக ஊரின் பெயரால் நடாத்தப்படுகின்ற ஒன்றுகூடல் எதுவானாலும் அதனால் ஒற்றுமையோ அல்லது ஊரின் பெயரோ விளங்கப்போவதில்லை. உங்களிற்கும் அழைப்பு விடுப்பவரிற்கும் மட்டும் இலாபம் கிடைக்கிறது என்ற நினைப்போடு செல்பவர்கள் ஒன்றுகூடல், கூத்து, கும்மாளங்களில் பங்குபற்றுங்கள். ஊரின் பெயரால் ஊரிற்கோ மக்களிற்கோ எவ்விதமான நற்பெயரும் இதனால் ஏற்படபோவதில்லை, மாறாக கனடா வாழ் காரை மக்களின் ஒற்றுமையின் சின்னமாக விளங்கிய கனடா காரை கலாசார மன்றத்தை தூக்கிலிட்டு தமது சொந்த செயற்பாடுகளிற்காக உங்கள் பலவீனங்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை உறுதியாக கூறிக்கொள்ளுகின்றேன்.

கனடா காரை கலாசார மன்றமோ அல்லது காரைநகர் மக்களின் சார்பாகவோ எந்தவொரு அமைப்பினாலும் 27.07.205 அன்று எந்தவொரு ஒன்றுகூடலும் நடைபெறவில்லை. தனிப்பட சிலரின் அல்லது தனிப்பட்ட சிலர் தமது சுயதேவைகளிற்காக நடாத்துவதாக மக்களிற்கு அறியப்படுத்துவது நல்லது.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிக கவனமாக செயற்படுங்கள்.

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள்,...

31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக அனுமதி பெற்ற தேவையுடைய மாணவிக்கு மடிக்கணணி வளங்கியுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக தொடரட்டும் கல்விக்கான பணிகள். 31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக...

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் , கல்விக்காக இன்னொருவரின் உதவிகளை வேண்டி நிற்கிறார்கள்.

காரைநகர் அபிவிருத்தி சபை செய்தி. காரைநகரில் இருந்து இந்த ஆண்டு 20 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள். அவர்களில் ஆறு...

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026 இந்த ஆண்டு(2026) ஜனவரி 21ம் திகதி காரைநகர் பெரியடைப்பில்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605