காரைநகர் விளையாட்டுக்கழக இளைஞர்கள் பங்கு பற்றும் ‘ Raj Championship Trophy’ உதைபந்தாட்ட சுற்றுத்தொடர் 30.08.2025 இன்று சனிக்கிழமை விறுவிறுப்பாக ஆரம்பமாகியது.

காரைநகர் விளையாட்டுக்கழக இளைஞர்கள் பங்கு பற்றும் ‘ Raj Championship Trophy’ உதைபந்தாட்ட சுற்றுத்தொடர் 30.08.2025 இன்று சனிக்கிழமை விறுவிறுப்பாக ஆரம்பமாகியது.

காரைநகர் விளையாட்டுக்கழக இளைஞர்கள் தமது நண்பன் சங்கரப்பிள்ளை பவன்ராஜ் அவர்கள் 02.07.2025 அன்று எதிர்பாராத விபத்தில் அகாலமானதை தொடர்ந்து அவரின் நினைவாக உதைபந்தாட்ட சுற்றுத்தொடர் ஒன்றினை நடாத்த திட்டமிட்டனர்.

‘Karai Challengers’ விளையாட்டுக்கழக்கம் முன்னெடுக்க காரைநகர் விளையாட்டுக்கழகங்களில் இருந்து 5 அணிகள் Mix and Max முறையில் வீரர்களை தெரிவு செய்து கொண்டனர்.

அணிக்கு 9 வீரர்கள் பங்குபற்றும் இச்சுற்றுத் தொடரில் காரைநகரின் அனைத்து பகுதிகளில் இயங்கும் விளையாட்டுக்கழகங்களில் இருந்தும் 5 பலமான அணிகளில் தலா 14 வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் தெரிவு செய்யப்பட்டனர்.

தெரிவான 5 அணிகளும் அதன் உரிமையாளர்களும் முதற்கட்டமாக இங்கே தெரியப்படுத்தப்படுகிறார்கள்.

30.08.2025 இன்று சனிக்கிழமை தெரிவுசெய்யப்பட்ட அணிகளிற்கிடையேயான போட்டிகள் ‘Karai Challengers’ விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பகியது. தொடர்ந்து அடுத்து வரும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் போட்டிகள் நடைபெறும்.

வெற்றிபெறும் அணிக்கான முதல் பரிசாக 110,000(ஒரு இலட்சத்து பத்தாயிரம்) ரூபாய்களும், இரண்டாவது இடத்திற்கு வரும் அணிக்கு 80,000(எண்பதாயிரம்) ரூபாய்களும் பணப்பரிசாக வளங்கப்படவுள்ளதாக சுற்றுத்தொடர் ஏற்பாட்டாளர்களாக ‘ Karai Challengers’ விளையாட்டுக்கழகத்தினர் அறியத்தருகின்றனர்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

1980களில் நடுத்தெரு boys… காரைநகரின் அதிஉயர் உயரமான கோவளம் வெளிச்ச வீட்டின் உச்சியில்..!

‘Karai Challengers’ விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெறும் ஐந்து அணிகள் கொண்ட ‘Raj Champion Trophy’ உதைபந்தாட்ட சுற்றுதொடரில் முதல்கட்டமாக சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்ற போட்டிகளில ‘சோலையான்’ அணி விளையாடிய ஐந்து தெரிவு போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது.

Leave a Reply