யாழில் இருந்து ஒளிபரப்பாகும் DAN TV இல் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வேட்பாளர்களிற்கான விவாதங்களின் அடிப்படையில் காரைநகர் பிரதேச சபை, நல்லூர் பிரதேச சபை, யாழ் மாநகர சபை என்பனவற்றில் ‘மான்’ பாயும் என புள்ளிவிபரங்கள் தெரியப்படுத்தியிருந்தன.
இதனை முன்கூட்டியறிந்தே யாழ் மாநகர சபையில் இருந்து ‘மான்’ கட்சிக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதனை மீள்பரிசீலனை செய்து திருத்திய வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ள சட்ட ரீதியான அவகாசத்தை கூட வளங்க முன்வரவில்லை.
காரணம் வடக்கு கிழக்கு என நாம் எதை முன்வைத்தாலும் யாழ்ப்பாண மாநகராட்சி என்பது பெயரளவிலே தெற்கிலே வேறுவகையான பெரும் அலையை வீசக்கூடியது. கடந்த காலத்தில் மேஜராக இருந்து பணிசெய்தவரும் அதனூடாக யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட மக்களின் அதீத வரவேற்பை பெற்றவருமான சட்டத்தரணி மணிவண்ணன் அவர்கள் அமோக வெற்றிபெறுவார் என்பதை கருத்தில் கொண்டே தேர்தல் ஆணையகம் வாக்கு சீட்டு மீளஅச்சடிக்கும் செலவுகளையும் நேரகாலத்தை காரணமாகவும் கொண்டு யாழ் மாநகர சபையில் ‘ மான்’ சின்னத்தை போட்டியிட அனுமதிக்கவேயில்லை.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படகூடாது என்ற ஜனநாய சட்டக்கொள்கையின் பிரகாரம் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீளசமர்ப்பிக்கவும் வாக்கு சீட்டுக்களை மீளவும் அச்சடிக்க ஆகும் செலவுகளை காரணம் காட்டி வெற்றி பெறும் என புள்ளிவிபரங்கள் திசைகாட்டிய ” மான்” சின்னத்தை யாழ் மாநகர சபை தேர்தலில் இருந்து வெளியேற்றியமையானது NPP யின் dirty politics வெளியானது.
யாழ் மாநகர சபை மட்டுமல்ல, நல்லூர் பிரதேச சபையிலும் “மான்” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களிற்கே அதீத வாக்குகள் விழும் என்பதை அறிந்து நல்லூர் பிரதேச சபையில் காரைநகரை சொந்த இடமாக கொண்ட ஒரு வேட்பாளரை அதிரடியாக நிறுத்தியமை எல்லாமே NPP யாழ்ப்பாண மாநகர சபையினை எப்பேற்பட்டாவது கைப்பற்ற வேண்டும் என்ற கொள்கையை கொண்டுள்ளது என்பதற்கு வலுவான காரணங்களாகும்.
வடக்கு, கிழக்கென அரசியலில் எந்த சாயம் பூசினாலும் காரைநகர் மக்கள் என்றும் எப்போதும் தமக்கென அரசியலில் ஒரு அடையாளத்தை கொண்டவர்கள். எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய ஜனநாயக வழியில் கேட்டுப்பெற்று அபிவிருத்திகளை மேற்கொள்வோம், பிச்சை போடுவதாக நினைத்து வளங்கும் மத்திய அரசின் நிதிகளிற்காக கையேந்த மாட்டோம் நாம் என காரைநகர் மக்கள் NPP அரசிற்கு காரைநகர் மக்கள் உரத்து கூற வேண்டிய பிரதேச சபை தேர்தல் தான் 06.05.2025 நடைபெற போகிறது.
யாழ் மாநகர சபையில் ‘மான்’ சின்னத்தில் திரு.விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் போட்டியிட்டிருந்தால் யாழ் மாநகர சபையை இழந்து விடுவார்கள் என்பதனாலேயே வேட்புமனுக்களிற்கு மீண்டும் அவகாசம் வழங்குவதை தடைசெய்திருந்ததும் உண்மையானால்…
யாழ் மாநகர சபையின் கடந்த கால பணியின் போது திரு. விஸ்வலிங்கம் மணிவண்ணனின் அபிவிருத்தி பணிகளிற்கு யாழ் மாநகர சபை மக்களின் சார்பாகவும் “மான்” சின்னத்திற்கு வாக்களித்து உண்மை நிலை என்னவென்பதை உணர்த்த வேண்டியதும் காரைநகர் மக்களின் கடமையாகும்.
சர்வவல்லமை பொருந்திய ஜனாதிபதி பதவியையும், பராளுமன்றத்தையும் நாட்டிற்காகவும் கடந்த கால இழப்புகளுற்காக நியாயம் வேண்டியும் NPP இடதுசாரி அநுர அரசிடம் கையளித்திருந்தாலும் காரைநகர் பிரதேச சபையில் NPP க்கு இடமில்லை என்பதையும் காரைநகர் மக்கள் மூன்று நிலை அரசியலையும் நன்கு அறிந்தவர்கள் என்பதை புரிய வைக்க வேண்டும்.
அது மட்டுமன்றி 06.05.2025 அன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் வடக்கில் NPP எத்தனை இடங்களை கைப்பற்றினாலும் NPP யையும் உரசிப்பார்க்க ஒரு இடம் தேவையானால் அதில் காரைநகர் முதலிடம் வகிக்கும், அனுபவமும் திறமையும் மத்திய அரசிடம் இருந்து பிரதேச சபைகளிற்கு பெறவேண்டிய சலுகைகளையும் நிதியினையும் பெற்றுக்கொள்ள திறமையும் அனுபவமும் கறைபடியாத கைகளையும் கொண்டு “மான்” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் கொண்டுள்ளார்கள்.
அரசியலில் அனுபவமும் திறமையுடனும், ஏற்கனவே மக்கள் நலப்பணிகளில் ஆர்வத்துடனும் செயற்பட்டவர்களினால் மட்டுமே சாத்தியமானதும் ஆகும்.
20,000 ரூபா சம்பளத்திற்காகவும், இனிமேல் தான் தான் யார் என தனது வட்டாரத்திற்கே தெரிவிப்பதற்காக போட்டியிடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிற்காக உங்கள் ஒரு வாக்கினை விரயமாக்காதீர்கள்.
நட்பு வேறு, உறவு வேறு, அரசியல் என்பதும் வேறு. உங்கள் வோட்டு அரசியலாகும். நட்புக்காகவும், உறவுக்காகவும் நீங்கள் போடும் வோட்டு முற்றிலும் வீணாகப்போவது உறுதி.
ஊரிற்காக, மண்ணிற்காக, உங்களிற்காக இதுவரை என்ன செய்தார்கள் என்று அறிந்து கொண்டு நீங்கள் போடும் வாக்குதான் உங்களையும், ஊரையும், மண்ணையும் வளப்படுத்தும் என்பதை உணர்ந்து கொண்டு உங்கள் வாக்கினை செலுத்துங்கள்.




