2008ம் ஆண்டு கல்லூரி அதிபர் அவர்கள் கல்லூரியின் நூல் நிலையத்தை மேம்படுத்த தேவையான 650 வகையான நூல்களின் பட்டியல்களை அனுப்பி வைத்தார். இந்நூல்களை கொழும்பில் கொள்வனவு செய்வதற்கு அண்ணளவாக இரண்டு இலட்சம் ரூபாய்கள் தேவையென மதிப்பிடப்பட்டிருந்தன.கொழும்பு வர்த்தகர்கள் சிலர் இவற்றை கொள்வனவு செய்து காரைநகர் யாழ்ற்றன் கல்லூரிக்கு எடுத்துச் சென்று வழங்கும் பணியை தாம் நிறைவேற்றிக் கொடுப்போம் என உறுதி வழங்கியுள்ளார்கள்.
‘எனது ஊர் காரைநகர்” சார்பில் கல்லூரி அதிபருடன் தொடர்பு கொண்டவேளை இவ்வுதவியை உடனடியாக நிறைவேற்றி தருமாறு அதிபர் அவர்கள் வேண்டுகோளை முன்வைத்தார். யாழ்ற்ரன் கல்லூரிக்கு வழங்கவென 2007ம் ஆண்டு வருட இறுதியில் அன்பளிப்பாக பெறப்பட்ட(Laptop)கம்பியூட்டர்கள் கனடா-காரை கலாச்சார மன்றத்தினரின் அசிரத்தையால் பயனற்று போகும் நிலையில் இருந்தன.
அவற்றில் சிலவற்றை பழுது பார்த்து நல்லெண்ண முறையில் பெற்றுக்கொண்ட சிலர் வழங்கிய அன்பளிப்புக்களின் மூலம் ‘எனது ஊர் காரைநகர்” மேற்படி பாடசாலை நூல்நிலையத்திற்கு தேவையான நூல்களை கொள்வனவு செய்ய ஒரு இலட்சத்து 76ஆயிரம் ரூபாய்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அத்துடன் கனடா காரை கலாச்சார மன்றத்தினருக்கு நேரடியாக 750 டொலர்களும் வழங்கப்பட்டது. கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு வழங்கப்பட்ட 750 டொலர்களும் யாழ்ற்ரன் கல்லூரி நூலக வளர்ச்சிக்காக அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.




