காரைநகர் பிரதேச சபையின் கவனத்திற்கு: காரைநகர் J/47 பிரதேசத்தில் அமைந்துள்ள மருதடி – நீலிப்பந்தனை வீதி, புதுவீதி – நீலிப்பந்தனை வீதி நிலைமை

காரைநகர் பிரதேச சபையின் கவனத்திற்கு:

காரைநகர் J/47 பிரதேசத்தில் அமைந்துள்ள மருதடி – நீலிப்பந்தனை வீதி, புதுவீதி – நீலிப்பந்தனை வீதி என்பன வழமை போல் அடுத்து வரும் இரண்டு மாதங்களிற்கு பிரதேச சபையினால் மூடப்படுவதாக அறிவித்து பொதுமக்களிற்கு இதனூடான போக்குவரத்து தடை செய்யப்படுவதாக அறிவிக்கவும், இவற்றிற்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய மாற்று பாதையை தெரிவித்தும் அறிக்கை விடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

அல்லது இப்பகுதி தங்களது ஆழுமைக்கு அப்பாற்பட்ட பிரதேசம் என பிரகடனம் செய்து தங்களது பொறுப்புக்களில் இருந்தும் பிரதேச சபைக்கு சொந்தமான வீதிகள் விபரத்தில் இருந்தும் இந்த வீதிகளை விடுவித்தும், வீதிகள் உள்ளிட்ட இப்பகுதியினை நன்னீர் சேகரிக்கும் குளமாக பிரகடனம் செய்தும் அறிவிக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

பிரதேச சபை ஊடாக இப்பகுதி மக்கள் இந்த இரு வீதிகளையும் மழை காலத்திலும் பாவனைக்கு உரிய வகையில் செப்பனிட திட்டங்களை முன்வைத்த போதும் இதுவரை எந்தவித முன்னெடுப்பும் காட்டாத பிரதேச சபையானது இந்த வீதியானது அடுத்து வரும் இரண்டு மாதங்களிற்கு பாவனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்குரிய அறிவித்தலை வெளியிடுமாறும் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி உங்களது கரிசனைக்கு.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர் பரிமாற்றம் வேலைத்திட்டம் தற்போது காரைநகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

நூறு ஆண்டுகளாக (1926 – 2026) அன்னதானப் பணியில் ஈடுபட்டுவரும் காரைநகர் ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் மடாலய அன்னதான சபையின் நிர்வாக சபை கூட்டம் 16.11.2025 கடந்த ஞாயிற்றுக்கிழமை கலாசார மண்டபத்திலே நிர்வாக சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ள நடைபெற்றுள்ளது.

Leave a Reply