தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர் பரிமாற்றம் வேலைத்திட்டம் தற்போது காரைநகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தற்பொழுது மொனராகலை மாவட்டத்தில் இருந்து காரைநகரிற்கு 26 இறைஞர் யுவதிகள் வருகைதந்துள்ளனர். இவர்கள் தற்பொழுது வலந்தலை J/47 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடுகளில் தங்க வைக்கப்பட்டு கலாசாரம், உணவு, ஆலய வழிபாடு, சிரமதானம், மரநடுகை, போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றனர். இதன் ஏற்பாட்டாளர்கள் கூறுவதை விளக்கமாக இந்த நேரடி ஒளிபரப்பின் ஊடாக கேட்டு விளங்கிக்கொள்ளலாம்.
இதன் ஒருங்கிணைப்பாளர்களால் கோரப்பட்ட வகையில் காரைநகர் மக்கள் மற்றும் அமைப்புக்கள், தனியார் ஆகியோர் இதற்கான அனுசரணையினை வழங்கி வருகிறார்கள். அதன் அடிப்படையில் காரைநகர் அபிவிருத்தி சபையினரிடம் ரூபா ஒரு இலட்சம் வேண்டி முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை அடுத்து முதலாவது நிர்வாக சபை கூட்டத்தில் ரூபா 25,000 காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக வளங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிர்வாக சபை உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக ரூபா 10,000 மற்றும் சக்தி மேம்பாட்டுக்கழகம், மற்றும் காரைநகர் வர்த்தகர்கள், திரு. S.சிவஞானம் மற்றும் சிலர் முன்வந்து தமது பங்களிப்பாக உதவிகளை வழங்கி வருகின்றனர்.
காரைநகர் அபிவிருத்தி சபை பொருளாளர் திரு.வே.செல்வராசா அவர்கள் நேரடியாக பார்வையிட்டு ஒளிப்பதிவு செய்துள்ள வீடியோ பதிவில் தமிழிலும் தொடர்ந்து விளக்கங்களை கேட்கலாம்.
மற்றும் படங்களை அனுப்பி வைத்துள்ள சுபா அவர்களிற்கும் நன்றி.



