நாள் : Thursday, August 27, 2026
--:--:--
👁️
Awareness

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர் பரிமாற்றம் வேலைத்திட்டம் தற்போது காரைநகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர் பரிமாற்றம் வேலைத்திட்டம் தற்போது காரைநகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தற்பொழுது மொனராகலை மாவட்டத்தில் இருந்து காரைநகரிற்கு 26 இறைஞர் யுவதிகள் வருகைதந்துள்ளனர். இவர்கள் தற்பொழுது வலந்தலை J/47 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடுகளில் தங்க வைக்கப்பட்டு கலாசாரம், உணவு, ஆலய வழிபாடு, சிரமதானம், மரநடுகை, போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றனர். இதன் ஏற்பாட்டாளர்கள் கூறுவதை விளக்கமாக இந்த நேரடி ஒளிபரப்பின் ஊடாக கேட்டு விளங்கிக்கொள்ளலாம்.

இதன் ஒருங்கிணைப்பாளர்களால் கோரப்பட்ட வகையில் காரைநகர் மக்கள் மற்றும் அமைப்புக்கள், தனியார் ஆகியோர் இதற்கான அனுசரணையினை வழங்கி வருகிறார்கள். அதன் அடிப்படையில் காரைநகர் அபிவிருத்தி சபையினரிடம் ரூபா ஒரு இலட்சம் வேண்டி முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை அடுத்து முதலாவது நிர்வாக சபை கூட்டத்தில் ரூபா 25,000 காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக வளங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிர்வாக சபை உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக ரூபா 10,000 மற்றும் சக்தி மேம்பாட்டுக்கழகம், மற்றும் காரைநகர் வர்த்தகர்கள், திரு. S.சிவஞானம் மற்றும் சிலர் முன்வந்து தமது பங்களிப்பாக உதவிகளை வழங்கி வருகின்றனர்.

காரைநகர் அபிவிருத்தி சபை பொருளாளர் திரு.வே.செல்வராசா அவர்கள் நேரடியாக பார்வையிட்டு ஒளிப்பதிவு செய்துள்ள வீடியோ பதிவில் தமிழிலும் தொடர்ந்து விளக்கங்களை கேட்கலாம்.

மற்றும் படங்களை அனுப்பி வைத்துள்ள சுபா அவர்களிற்கும் நன்றி.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026 இந்த ஆண்டு(2026) ஜனவரி 21ம் திகதி காரைநகர் பெரியடைப்பில்...

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605