காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய திருப்பணியின் முன்னேற்றம்! |Sep.2022
மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய இராஜகோபுர பணிகள் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் அவர்களின் உபயத்திலும் கற்பக்கிரக மூலஸ்தானம் திரு.சண்முகம் சிவஞானம் அவர்களின் உபயத்திலும் கருங்கற்களினால் கட்டப்பட்டு வருவதையடுத்தும், வசந்த மண்டபம், மணிக்கோபுரம் ஆகியனவும் தனிப்பட்டவர்களின் உபயத்திலும் கட்டப்பட்டு வருவதையடுத்துகோயில் உள்வீதி சுற்றுப்புற கொட்டகைக்கு அனைத்து அடியவர்களின் பங்களிப்பில் 01.06.2022 அத்திவாரம் இடப்பட்டு 62 தூண்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டு வருகின்றது. இப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.










2023ம் ஆண்டு திருப்பணி வேலைகளை பூர்த்தி செய்து கும்பாபிஷேகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள போதிலும் அடியவர்களின் ஒத்துழைப்பிலும் ஆண்டவனின் கைங்கரியத்தினாலும் தங்கியுள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் உள்வீதி சுற்றுப்புற கொட்டகையின் திருப்பணி காட்சிகள் எடுத்து வரப்பட்டுள்ளன.

Leave a Reply
You must be logged in to post a comment.