காரைநகர் மக்கள் எந்த ஊரிற்கு சென்றாலும் அங்குள்ள மக்களுடன் இணைந்து கொள்வார்கள். தாராள மனத்துடன் உதவும் சிந்தனை கொண்டவர்கள். யாழில் வர்த்கத்துறையில் ஈடுபட்டுள்ள காரைநகர் மருதடியை சேர்ந்த ஒப்பிலாமணி நடேசரூபன் அவர்களது நற்செயல் குறித்து வெளியூர் நண்பர் ஒருவரது பதிவு எனது கண்ணில் பட்டது. காரைநகர் மக்களில் பலரும் அன்று ஒப்பிலாமணி அண்ணரை நன்கு அறிந்திருப்பார்கள். கடின உழைப்பாளி, பலநோக்கு கூட்டுறவு சங்க மண்ணெண்ணை வழங்கும் பணியில் ஒத்தை மாட்டு வண்டியில் ஊர் முழுவதும் உள்ளவர்களிற்கு மண்ணெண்ணை வழங்குபவர். அன்னார் அமரர் ஆகிவிட்ட போதிலும் அவருடைய பிள்ளைகளின் செயல் மூலம் மக்களிடையே உயிர் வாழ்பவர்.
மற்றுமொரு மகள் மருதடி பிள்ளையார் கோயில் திருப்பணியில் முழுமையாக மின்சார இணைப்புக்கான 30 இலட்சம் ரூபாய்கள் செலவினையும் வைரவர் சந்நிதியையும் முழுமையாக கருங்கற்களினால் கட்டிக்கொடுப்பவர். அத்துடன் மடத்துக்கரை முத்துமாரி அம்மன் கோயில் சப்பறம் மற்றும் சப்பறம் நிற்பதற்கான முழுமையான கட்டிடம் என்பவற்றை கோடி ரூபாய்களிற்கு மேலான செலவுடன் கட்டி வழங்கியவர் என்பதும் யாவரும் அறிந்ததே.



