காரைநகர் அபிவிருத்தி சபை, மக்களுடன் மக்களிற்காக களத்தில் பணியாற்றி வருகிறார்கள்..!

காரைநகர் அபிவிருத்தி சபை, மக்களுடன் மக்களிற்காக களத்தில் பணியாற்றி வருகிறார்கள்..!

இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்படைந்த மக்களிற்கு உதவிகளை வழங்கவும் உதவிக்கரம் நீட்டவும் திரு.தேவலிங்கம் பரணீதரன் தலைமையிலான காரைநகர் அபிவிருத்தி சபை தீர்மானித்துள்ளது. அத்துடன் அமைப்பின் சொந்த நிதியில் இருந்து ஐந்து இலட்சம் ரூபாய்களை பயன்படுத்த பொருளாளர் திரு.வே.செல்வராசா அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளார்.

முதல் கட்டமாக மண் தரை வீடுகளில் வசிப்பவர்களிற்கு விரிப்பாக பயன்படுத்தும் வகையில் தரைப்பாள்கள், உலர் உணவுப்பொருட்கள் கொண்ட பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரதேசங்களிலும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கும் மக்களை அப்பிரதேச கிராமசேவகர்கள் ஊடாக கண்டறிந்து நேற்றும் இன்றும் 200 குடும்பங்கள் வரை பொதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேற்கொண்டு மேலும் 50 பொதிகள் தயாராக உள்ளதும் நாளை 01.12.2025 திங்கள்கிழமை வழங்கவுள்ளதாகவும் அறியப்படுகிறது.

காரைநகர் பிரதேச செயலர் செல்வி ந.ரஞ்சனா அவர்களும் அபிவிருத்தி சபையினருடன் இணைந்து கொண்டுள்ளார். அத்துடன் அரசினால் முன்னெடுக்கப்படும் திட்டத்திற்கு அமைய இரண்டு நேர சமைத்த உணவு மற்றும் ஒரு தேநீருக்காக நாள் ஒன்றிற்கு தலா ஒருவருக்கு 600 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை முன்னெடுக்க விரும்புபவர்கள் சமையல் வசதியுடன் கூடியவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள் எனவும் அறியப்படுகிறது.

வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள் பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கம் தவிர மற்றைய அமைப்புக்கள் கடந்த பல தசாப்தங்களாக இயங்கி வந்துள்ள போதிலும் இக்கட்டான இச்சூழ்நிலையில் உதவமுடியாத நிலையில் அமைப்புக்கள் சீர்குலைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வெளிநாடுகள் வாழ் நல்லுள்ளங்கள் நேரடியாக காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகத்தினருடன் நேரடியாக தொடர்புகளை மேற்கொண்டு ஏற்கனவே சிலர் தமது உதவிக்கரங்களை நீட்டியுள்ளதும் அறிந்து கொள்ளப்பட்டது.

பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கத்திற்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் கூடிய விரைவில் அதற்குரிய பதிலை வழங்கும் எனவும் எதிர்பார்ப்புடன் செயற்படுவதாக நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கனடா வாழ் காரை மக்களே நீங்கள் நேரடியாக காரைநகர் அபிவிருத்தி சபை வங்கி கணக்கிற்கு உங்கள் உறவுகள் மூலம் ஐந்தோ பத்தோ உதவ முடியும். கனடாவில் இருந்து 10,000 ரூபா( $50 டொலர்) அனுப்ப மேலும் $10 டொலர் அனுப்பும் செலவாக கருதலாம், அவ்வாறான சந்தர்ப்பத்தில் அச்செலவு இன்றி நீங்கள் விரும்பும் தொகை உங்கள் பெயரால் காரைநகர் அபிவிருத்தி சபையிடம் ஒப்படைக்கவும் உங்கள் பெயரில் ரசீது பெற்றுத்தரவும் ‘எனது ஊர் காரைநகர்’ என்னை தொடர்பு கொள்ளலாம். அதற்கு முன்னர் நேரடியாக காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அவர்களிற்கு உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்.

இதோ கீழே நேரடியாக பணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு விபரம் மற்றும் தொடர்புகளிற்கான தொலைபேசி இலக்கங்கள்.

பொதுப்பணிக்காக மட்டுமன்றி உங்களது உறவுகள் எவருக்கேனும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனிப்பட்ட வகையில் நிதி கொடுத்து உதவ வேண்டியதாக இருப்பினும் அதனையும் நிதி அனுப்பும் செலவு இன்றியும் உடனடியாகவும் செயற்படுத்தி தரவும் தயாராக உள்ளனர்.

Bank of Ceylon – Karainagar Branch

Karainagar development society.

A/C Number: 7641570

தலைவர்: தேவலிங்கம் பரணீதரன் – Messanger ஊடான தொடர்புகளிற்கு Thevalingam Paranitharan

செயலாளர்: பொன்னுத்துரை பரந்தாமன் +94 77 070 3356

பொருளாளர்: வேலாயுதபிள்ளை செல்வராசா +94 76 797 8529

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

இராமுப்பிள்ளை சிவலிங்கம் |மறைவு: 27.11.2025

காரைநகர் மருதடியை சேர்ந்த ஒப்பிலாமணி நடேசரூபன்

Leave a Reply