காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் மாதாந்தம் தனிப்பட்ட உபயகாரர்கள் உபயத்துடன் இந்த ஆண்டு(2025) ஏப்ரல் மாதம் முதல் ஆலய அறங்காவலர்கள் மூலமாக தீர்மானிக்கப்பட்ட நிர்வாகத்தின் கீழ் மிகவும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் மாதாந்தம் தனிப்பட்ட உபயகாரர்கள் உபயத்துடன் இந்த ஆண்டு(2025) ஏப்ரல் மாதம் முதல் ஆலய அறங்காவலர்கள் மூலமாக தீர்மானிக்கப்பட்ட நிர்வாகத்தின் கீழ் மிகவும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
நீலிப்பந்தனை அம்பாள் ஆலய சுற்றாடலை சொந்த இடமாக கொண்ட அம்பாள் அடியவர்கள் அம்பாளிற்கு ஆகம முறைப்படி நித்திய நைமித்திய பூஜைகளை கிரமமாக நாடாத்துவதற்கு பெரும் ஆதரவு வழங்கி வருகிறார்கள்.
நித்திய பூசைகளில் ஈடுபடும் குருவானவருக்கு மாதாந்தம் முதலாம் திகதியானால் அந்த மாதத்திற்கான வேதனம் வங்கி மூலம் standing order மூலம் வழங்கப்பட்டு வருவதுடன், கோயில் பராமரிப்பு, மின்சாரம், தினமும் பூஜைகளிற்கான ஏற்பாடுகள், திருவிழாக்களிற்கான முன்னேற்பாடுகள் என அனைத்தையும் கவனத்தில் கொண்டு நிர்வாகம் செயற்பட்டு வருகின்றது.
ஆதீனகர்த்தாக்காளால் நியமிக்கப்பட்ட நிர்வாகம் வெளிப்படையாக அனைத்தையும் நிறைவேற்றி வருவதுடன், 2025 ஏப்ரல் மாதம் முதல் 2025 டிசம்பர் 31 வரையான வரவும் செலவும்(கணக்கறிக்கை) வெளியிடவும் அடியவர்களிடம் இருந்து 5 ரூபா நிர்வாகம் பெற்றிருந்தாலும் அதற்குரிய ரசீதை வளங்கி கணக்கறிக்கையினை அடியவர்கள் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாதாந்த நித்திய பூசைகளிற்கு அதிகமாக பெறப்படும் நிதி நித்திய பூசைக்கான நிரந்தர வைப்பு நிதியத்தில் இணைத்துக்கொள்ளப்படும். நித்திய பூசைகளின்போதும், சிறப்பு நாட்கள், திருவிழாக்களின் போது அடியவர்களினால் தட்சணையாக குருவின் ஆசீர்வாதத்திற்காக வழங்கப்படும் தட்சணை குருவிற்கே சொந்தமானதாகும். உண்டியல் மூலம் பெறப்படும் நிதி மட்டும் கோயில் நிர்வாகத்தினரால் வரவில் வைக்கப்படுகிறது. நவம்பர் மாதம் கோயில் உண்டியல் மூலம் 30,000 ரூபா வரை பெறப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
டிசம்பர் மாத நித்திய பூசை உபயம் மற்றும் மாதாந்த உபயங்கள் வருமாறு.













Leave a Reply
You must be logged in to post a comment.