பொல்லு கொடுத்து அடி வேண்டுவது எப்படி? கனடா காரை கலாச்சார மன்ற ஊர்ப்பணி |16.01.2012

கனடா காரை கலாச்சார மன்றத்தில் நடைபெறும் பலவிடயங்களை நாம் இந்த இணையத்தளத்தில் பலதடவைகள் அலசி ஆராய்ந்திருக்கின்றோம். ஆனாலும் சில விடயங்கள் சொல்லப்பட முடியாதவைகளாக நாம் கருதியிருந்தோம். ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் சொல்லப்படவேண்டிய விடயங்கள் பலவற்றை மேலோட்டமாக சொல்லுகின்ற போதே அதனை ஜீரணிக்க முடியாதளவில் பலர் தனிப்பட்ட வகையில் பகைமை பாராட்டுகின்றார்கள். பலவிடயங்கள் உள்ளங்கை நெல்லிக் கனியாக உதாரணங்கள் எதுவும் இன்றி விளங்கிக்கொள்ள கூடியவகையில் அப்பட்டமாக இம்மன்றம் பற்றி கூறவேண்டிய நேரம் தற்போது எழுந்துள்ளது.

‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் ஊடாக நாம் பல வகையிலும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாகத்தினரை விமர்சித்திருக்கின்றோம். ஊரின் நன்மை கருதி அவற்றை விமர்ச்சிக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போதிலும் பலர் இந்த மன்றத்தின் நிர்வாகத்தினரைப்பற்றி இவ்வாறு விமர்சிப்பது அண்ணாந்து கொண்டு எச்சில் உமிழ்வதாக மிகுந்த சங்கடத்திற்கு உள்ளானார்கள். ஆனால் அப்போதெல்லாம் இந்த இணையத்தளத்தில் எடுத்து வந்தவையெல்லாம் வெறும் வெத்து வேட்டுக்களே.

கனடா வாழ் காரை மக்கள் ஊர்ப்பணி செய்ய தாமாக முன்வருவதில்லை. மிகவும் வசதியாகவும், ஆடம்பரமாகவும் கனடாவில் வாழும் காரைநகர் மக்கள் ஊரிற்காக ஒரு அதிஸ்டலாப சீட்டு 10 டொலருக்கு வேண்டுமாறு கேட்டாலே வசதியில்லையென்று வாய் கூசாமல் சொல்
பவர்கள். இவர்களிடம் இருந்து 10 டொலர் வேண்டுவதே மிகுந்த சிரமமாக இருக்கின்றபோது நீங்கள் பணம் கொடுத்தாலும் சிலவேளைதான் உங்கள் பணம் ஊரிற்காக பயன்படும் என்று சொல்வதனால் அத்தி பூத்தாற்போல் எப்போதாவது ஊரிற்காக கொடுக்கின்ற பத்து டொலரைகூட கொடுக்காமல் விட்டுவிடுவார்களே என்கின்ற ஆதங்கத்தோடு நாம் சில விடயங்களை இந்த இணையத்தளத்தில் இதுவரை
எடுத்து வருவதில்;லை.

இதோ அந்த ஒரு விடயத்தை இப்போது எடுத்து வருகின்றோம். ‘கனடா காரை கலாச்சார மன்றத்தில் பணம் களவாடப்படுகின்றது’ ஜீரணிக்க நிறையவே கஷ்டமாக இருக்கும். இந்த இணையத்தளத்தில் கனடா காரை கலாச்சார மன்றத்தில் பணம் களவாடப்படுகின்றது என்பதனை எந்தவித அத்தாட்சியும் இன்றி தெரிவிப்பதற்கு நாங்கள் அறிவில்லாத முட்டாள்கள் அல்ல. முதலில் நீங்கள் அறிவுள்ளவர்களாக இருந்தால் உங்கள் சிந்தனையில் இருந்து விளங்கிக் கொள்ளுங்கள். பின்னர் எங்களிடம் என்ன அத்தாட்சி உள்ளது என்பதனை இங்கேயே
தெரிவிக்கின்றோம்.

கூத்து மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் கனடா காரை கலாச்ாசர மன்றத்தின் நிர்வாக சபையினருக்கு அறுவடை பற்றிய கவலை இவர்களிற்கு இருந்தது இல்லை. கடந்த பல வருடங்களாக கனடா காரை கலாச்சார மன்றத்தில் கூத்துக்கள் மட்டுமே அரங்கேற்றப்படுகின்றன. விளலுக்கு இறைத்த நீராக கனடா வாழ் காரை மக்களின் ஊர் மீதுள்ள பற்றும் உணர்வும் நிர்
வாக சபைக்கு வந்த பலராலும் விரயம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது. கடந்த கால நிர்வாக சபை மட்டுமல்ல போஷகர்சபை, கணக்காய்வாரள்கள் என இந்த மன்றத்தை வழி நடாத்துவார்கள் என நாம் நினைத்த அத்தனை பேர்களினாலும் கனடா வாழ் காரை மக்களின் நேரம், உழைப்பு, செயற்திறன், பணம் அத்தனையும் வீணடிக்கப்பட்டிருக்கின்றது.

‘காரை வசந்தம்’ நிகழ்வு மூலம் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு பெருமளவு நிதி சேகரிக்கப்பட்டு வருவதோடு இந்நிகழ்வுக்காகவும்
பெருமளவு நிதி செலவு செய்யப்பட்டு வருகின்றது என்பதனை முதற்கண் நாம் அறிந்து கொள்ளவேண்டும். இவ்வாறு காரை வசந்தம்
நிகழ்வு ஒழுங்கு செய்யப்படும் பொழுது நுழைவுச்சீட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு நிர்வாகசபை உறுப்பினர்களிடமும் மற்றும் நண்பர்களிடமும்
தலைவர், செயலாளர், பொருளாளர்களினால் கொடுக்கப்படுகின்றது.

அவ்வாறு விற்பனைக்காக கொடுக்கப்படுகின்ற நுழைவுச்சீட்டுக்களை ‘காரை வசந்தம்’ நிகழ்வு நிறைவுபெற்றதும் அவற்றினை கொடுத்தவர்
களிடம் இருந்து மீளபெறுவதில்லை நிர்வாகத்திற்கு பொறுப்பாக உள்ளவர்கள். இங்கே சில விடயங்களை எழுதுவதன் மூலம் சிறுபிள்ளைத்தனமாக தோன்றலாம். ஆனால் காலம் காலமாக ‘காரை வசந்தம்’ நிகழ்வு முடிவடைந்து ஆறு மாதங்களின் பின்னரே யாரிடம் ரிக்கெட்டுக்களை கொடுத்தோம் என தேடத்தொடங்குவார்கள். ஆறு மாதம் கழித்து பொருளாளர் கட்டாயம் கணக்கு வழக்கு சரிசெய்ய வேண்டும் என்ற ரீதியில் மட்டுமே இவ்வாறு தேடத்தொடங்குவார்கள்.

இறுதியில் 50 ரிக்கெட்டுக்களை விற்பனைக்காக வேண்டியவர் 10 ரிக்கெட்தான் விற்றதாகவும் மிச்ச ரிக்கெட்டுக்கள் எங்கேயோ வைத்துவிட்டேன், தேடி எடுத்து தருகின்றேன், தருகின்றேன், தருகின்றேன் என்று கூறிக்கொண்டிருப்பார். இறுதியில் பொதுக்கூட்டத்திற்கு வரவு செலவு அறிக்கை தயார்படுத்த வேண்டிய நிலையில் பொருளாளர் எந்தவித உத்தரவாதமும் இன்றி குத்து மதிப்பாக இத்தனை ரிக்கெட்டுக்கள் தான் விற்கப்பட்டன என்று பொதுக்கூட்டத்திற்கு முதல்நாள் கணக்கு வழக்கு சரிசெய்து கணக்காய்வாளரிடம் வாய் மூலமாக எல்லாவற்றையும் தெரியப்படுத்தி கையொப்பமும் வேண்டிக்கொண்டு வந்து கொடுப்பார். இதுதான் காலம் காலமாக கனடா காரை கலாச்சார மன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

நாம் எல்லோரும் ஒரே ஊர் மக்கள் தான். வாய்ப்பேச்சையும் நம்பிக்கை நாணயத்தையும் நம்பித்தான் ஊர் சங்கம் நடாத்துகின்றோம். எல்
லாம் சரியாக நடந்தால் இந்த வரைதல் எழுத வேண்டியதேவை ஏற்படாது இருந்திருந்தால், கனடா காரை கலாச்சார மன்றம் செயற்படுவது
சரியாக இருந்திருக்கும். ஆனால் கடந்த காலங்களில் நடைபெற்ற காரை வசந்தம் நிகழ்வுகளை கொஞ்சம் நினைத்து பாருங்கள்….. ஒரு மன்றத்தின் மீதும், ஒரு தனிப்பட்ட மனிதன் மீதும் வெளிப்படையாகவும், பணம் களவாடப்பட்டிருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால் எவற்றையெல்லாம் சரிபார்த்திருக்க வேண்டும் என கொஞ்சம் நினைத்து பாருங்கள்.

2010ம் ஆண்டு ரவி ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற காரை வசந்தம் நிகழ்வில் கலந்து கொண்டவர்களை தனிப்பட்ட முறையில்
ஒவ்;வொருவராக மண்டபத்தில் நான் நன்றாகவே எண்ணினேன். ஒரு கட்டத்தில் 680 பெரியவர்களும், 140 சிறுவர்களும் இருந்தார்கள். அதுதவிர மேலும் நிகழ்வுகளிற்கு வந்து போய்க்கொண்டிருந்தவர்கள் மேலும 200 பேர்வரையானோர். ஆனால் இந்த மன்றத்தின் வரவு செலவில் விற்கப்பட்ட அனுமதிச்சீட்டுக்களின் எண்ணிக்கை 430 என்றுதானே வந்தது. கனடா காரை கலாச்ாசர மன்றத்தின் நிர்வாக சபையில் இருக்கும் ஒவ்வொரு அங்கத்தவர்களும் அனுமதிச்சீட்டு பெற்றுத்தான் காரை வசந்தம் நிகழ்வில் கலந்து கொள்கின்றார்கள். 75 ரிக்கெட்டுக்கள் அழைக்கப்படும் விருந்தினர்களிற்காகவும் இலவசமாகவும் வழங்கப்படுகின்றது.

என்னால் எண்ணப்பட்ட கணக்கை மட்டும் வைத்து இந்த முடிவிற்கு வரமுடியாது என்று நினைப்பவர்களிற்காக மற்றுமோர் ஆதாரம். 2010ம்
ஆண்டு விற்பனைக்காக 50 ரிக்கெட்டுக்கள் கொடுக்கப்பட்டவரிடம் இருந்து இன்னமும் விற்கப்படாத ரிக்கெட்டுக்களை கேட்டு பெற்றுக்கொள்ளப்படவில்லையென்பதும், அது பற்றிய எந்த கரிசணையும் இன்றித்தான் 2010ம் ஆண்டு கணக்கு வழக்குகளை ஒரு துண்டு பேப்பரில்
வெளியிட்டு அசத்தியிருந்தார் மதிப்பிற்குரிய பொருளாளர் அவர்கள். இங்கே தரப்படும் தகவல்களை தேவையேற்படும் பட்சத்தில் சட்டத்திற்
கு நிரூபிக்க அதற்குரிய ஆதரங்களையும் நாம் தயாராக வைத்திருக்கின்றோம்.

கணக்காய்வாளர் எத்தனை ரிக்கெட்டுக்கள் அச்சடிக்கப்பட்டன, எத்தனை விற்கப்பட்டது, எத்தனை களவாடப்பட்டது என்று எதுவுமே தெரியாமல் வாய்ப்பேச்சில் மட்டும் கணக்கு வழக்குகளை சரி செய்து கையொப்பம் இட்டு வருகின்றார் என்பது பலவருடகாலமாக நடந்துவரும் ஒரு செயல். காரணம் நாங்கள் எல்லாம் ஒரே ஊர்காரன்கள்தானே சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும் என்கின்ற நாகரீகமான நடத்தை.

இவற்றுடன் மற்றுமொரு மறுக்க முடியாத நடந்த சம்பவம். கடந்த கால பொருளாளர் ஒருவர் வெளிப்படையாகவே 8 கட்டு ரிக்கெட் புத்தகங்
கள் தொலைந்து விட்டன, அல்லது யாரிடம் கொடுத்தேன் என்று தெரியாது என்றும் அதனை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்
றும் தெரிவித்திருக்கின்றார். அதனை கணக்காய்வாளரும் சரியென கையொப்பம் இட்டு கொடுத்திருக்கின்றார். ஒரு பொறுப்பு மிக்க
பதவியில் உள்ள பொருளாளர் 8 கட்டு புத்தகம் அதாவது 80 ரிக்கெட்டுக்கள் தொலைந்து விட்டால் அல்லது கொடுத்தவர் யார் என தெரியாது விட்டால் அதற்கு முழு பொறுப்பினையும் ஏற்று 800 டொலர்கள் கொடுக்கத்தான் வேண்டும். அதுதான் நேர்மையும் கடமையும் கூட.

கடந்த கால நிகழ்வுகளை கண்ணுக்குள்ளை எண்ணை ஊற்றி பார்த்துக் கொண்டிருந்த காரணத்தினால் தான் கனடா காரை கலாச்சார மன்
றம் உண்மையில் எப்படிப்பட்டது என்பதை விமர்சிக்க வேண்டிய தேவையும் கடமையும் இந்த இணையத்தளத்திற்கு ஏற்பட்டது. கடந்த காலங்களை இனி எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள ரவி ரவீந்திரன் தலைமையிலான நிர்வாக சபையிலும் அது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 2011 காரை வசந்தம் நிகழ்வுகளின் போது எத்தனை ரிக்கெட்டுக்கள் விற்கப்பட்டன, யார் யாரிடம் கொடுக்கப்பட்டன என்று தெரியாது முழித்துக்கொண்டிருப்பதாக பொருளாளர் சங்கரப்பிள்ளை தவராஜா வெளிப்படையாக
தனிப்பட்ட நபர் ஒருவரிடம் தெரிவித்திருக்கின்றார். 85 கட்டு ரிக்கெட் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டதாகவும் யார் யாரிடம் கொடுத்தது என்ற முழுவிபரமும் தன்னிடம் இல்லையென்றும் ரிக்கெட்டுக்களை விற்பதற்காக பெற்றுக்கொண்டவர்கள் தாமாக கொடுத்தால் மட்டுமே தெரியும் என்று தெரிவித்ததுடன். கண்டவர்கள் எல்லோரிடமும் உன்னிடம் ரிக்கெட் புத்தகம் தந்தனானோ தந்தனானோ என்று கேட்டுக் கொண்டு
திரிவதாகவும் செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஒரு துண்டு பேப்பரிலை யார் யாரிடம் எத்தனை ரிக்கெட் புத்தகங்கள் விற்பதற்காக கொடுக்கப்பட்டது என்றுகூட தெரியாமல் நீங்கள் நிர்வாகத்தை ஆட்சி செய்கின்றீர்கள். ஆனால் இந்த இணையத்தளம் நீங்கள் எத்தனை ரிக்கெட்டுக்கள் அச்சடித்தீர்கள், எவ்வளவு பணம் கொடுத்தீர்கள், என்னென்ன செலவுகள் எல்லாம் செய்தீர்கள் என்பதனை அச்சொட்டாககூறும் வகையில் ஓசியில் சொந்தப்பணத்தில் ஊர்ப்பணி செய்கின்றோம். திறமையும் அறிவும் மட்டும் போதாது ஊர்ப்பணி செய்வதற்கு. ஊர்ப்பற்றும், அக்கறையும் நிறையவே இருந்தால் மட்டும் தான் ஊர்ப்பணி சந்தேகத்திற்கு இடமின்றி செய்யமுடியும்.

அன்பார்ந்த அறிவாளிகளே, இவ்வரைதலின் மூலம் கனடா காரை கலாச்சார மன்றம் தேவையில்லையென்றோ, அன்றி கனடா காரை கலாச்
சார மன்றத்தை அவமதிக்க வேண்டும் என்றோ இந்த வரைதல் எழுதப்படவில்லை. இது மன்றத்தில் பிழை இல்லை. மன்றத்தை ஆரம்பித்தவர்களும் அதற்கு ஒத்தாசைகள் வழங்குபவர்களும், அணுசரணையாளர்களும் நாகரீகம் எனும் போர்வைக்குள் வாய்திறந்து கேட்க முடியாதளவில் முடங்கிப்போயுள்ளார்கள். ஆனால் நிறையவே ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளத்தின் மீது நம்பிக்கையும் நாணயமும் வைத்திருக்கின்றீர்கள். நாகரீகமே இல்லாமல் நாங்கள் தனிப்பட்டவர்களை வையவேண்டிய இடத்தில் வைவதாலும், அதனையே நீங்களும் விரும்புவதாலும் தனிப்பட்ட கோபதாபங்களிற்காக நீங்களும் நிர்வாகத்தில் உள்ளவர்களை பழிவாங்க நினைப்பதாலும் உங்களிற்கு தெரிந்தவற்றை எங்களிற்கு அழைத்து அறியத்தருகின்றீர்கள். ஆனாலும் நாங்கள் தனிப்பட்டவகையில் தனிநபர்கள் ஒருவரையும் விமர்சிக்கவில்லை. கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் இந்த மன்றத்தின்
நிர்வாகசபையில் இருக்கின்றோம் என்று கூறிக்கொள்பவர்களை, பதவி மற்றும் பெயர்களை கூறி கனடா வாழ் காரை மக்களின் நேரத்தை,
திறமையை, பணத்தை வீணடிக்கும் வீணர்களை விமர்சிக்கின்றோம்.

கனடா வாழ் காரை மக்களே இந்த மன்றத்தில் அங்கத்தவராக இணைந்து கொள்ளாமல் இருப்பதற்காக ஆயிரம் காரணங்கள் ஏற்கெனவே
கூறியிருக்கின்றீர்கள். இது நீங்கள் இன்னமும் அங்கத்தவராக இணையாமல் இருப்பதற்காக கூறப்படும் ஆயிரத்து ஓராவது காரணம் அல்ல.
முதலில் மன்றத்தில் அங்கத்தவராக இணைந்து கொள்ளுங்கள். ஊரும் உறவும் ஒன்றாக இருக்கலாம், அண்ணன் தம்பியாக நாம் பழகலாம் ஆனால் பொதுப்பணி செய்ய முன்வந்தால் கணக்கும் வழக்கும் முக்கியம் என்பதையும் ஐயம் திரிபற கணக்கு வழக்குகளை வெளிப்படையாக காட்ட வேண்டும் என்பதனையும் நீங்கள் கேட்க முடிந்தால், அல்லது கேட்கின்ற நிலமை ஏற்பட்டால் இந்த இணையத்
தளம் இழுத்து மூடப்படும். வெகுவிரைவில் இந்த இணையத்தளம் இழுத்து மூடப்படுவற்கான அறிகுறியினை எதிர்பார்க்கின்றோம்.

‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் சார்பில்
தீசன் திரவியநாதன்

அடுத்த வரைதல் எழுத வேண்டிய தேவை ஏற்பட்டால் இந்த இணையத்தளத்தில் வெளியாகும் தமிழ் எழுத்துக்களில் குற்றம்
காண்பவர்களிற்காக கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபையினர் குடும்பமாக என்ன மொழியில் பேசுகின்றார்கள்
என்தனை ஒலி வடிவில் எடுத்து வர காத்திருக்கின்றோம்….எதிர்பாருங்கள் நினைப்பது நடக்கும்….!

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

வெற்றிநாதன் அரங்கு சிதம்பராமூர்த்தி கேணியடியில் திறப்புவிழா |15.01.2012

யா/ கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) கடந்த ஏழாண்டுகளாக நடைபெற்ற அபிவிருத்தி பணிகள் |28.01.2012

Leave a Reply