கனடா காரை கலாசார மன்றத்தில் எனது இருபது ஆண்டுகால பயணம் மிகவும் சுவாரசீகமானது.

கனடா காரை கலாசார மன்றத்தில் எனது இருபது ஆண்டுகால பயணம் மிகவும் சுவாரசீகமானது.

1973ம் ஆண்டு பிறந்து 1989ம் ஆண்டு ஐப்பசி மாதம் 6ம் திகதி குமரப்பா புலேந்திரன் ஞாபகர்த்தமாக ஒரு நாள் pass இன்றி திறந்து விட்ட போது ஊரை விட்டு வெளியேறிய போது 17 வயது நிரம்பாத ஒரு இரண்டும் கெட்டான் வயது. 1991 டிசம்பர் அமெரிக்கா வந்து 1992 ஜனவரி 09 இல் கனடாவில் காலடி பதித்தேன். திரும்பிப் பார்த்தால் 30 வருடங்கள் பறந்துதோடிவிட்டன.

ஆனாலும் எனக்கு வாழ்க்கை பயணங்களில் சொல்ல வேண்டிய ஞாபகங்கள் நிறையவே உள்ளன. தெரிந்தோ தெரியாமலோ புகைப்படங்களும் சாட்சியாகவுள்ளன. ஊரோடு சேர்ந்து தான் நானும் ஓடினேன் என்பதற்கான சாட்சியங்கள்.

2014இல் கனடா காரை கலாசார மன்றத்தின் செயலாளராக பதவியேற்ற கையோடு எங்களூர் மைந்தன் அமைச்சர் தியாகராசா மகேஸ்வரன் அவர்களது தம்பியார் கனடா வருகிறார் என்று வரவேற்று உபசரித்து விருந்து வளங்கினோம்.

எல்லாமே ஒரு ஊர் பற்று தான். அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக, இந்து கலாசார அமைச்சராக தனது இறுதி நாள்வரை சிவனுக்காகவும் ஊரிற்காகவும் ஆற்றிய பணிகளை எவராலும் முந்திச்செல்ல முடியாது. அந்த மகானின் பெயருக்கு களங்கம் வராது பார்த்துக்கொள்வதே பெரும்பாடாகிப்போய்விட்டது.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

அமரர் கந்தசாமி சண்முகம்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவு திதி நாளை முன்னிட்டு 08.12.2025 அன்று ஒரு நேர பகல் உணவு, முதியோர் பகல் பராமரிப்பு இல்லத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.

ஊர்ப்பொடியன், உங்களில் ஒருவன், உங்களோடு தோள் கொடுக்க அருகில் நிற்பவன்… நான் சொல்கிறேன் கொஞ்சம் கேளுங்கள்…!(வாசித்தால் உண்மை புரியும்..)

Leave a Reply