தேவையறிந்து உதவி வரும் நல்லுள்ளங்களுற்கு நன்றி..!
காரைநகரில் காரை மத்தி சிவகாமி அம்மன் கோயிலடியில் சிறந்த முறையில் இயங்கிவரும் முதியோர் பகல் பராமரிப்பு இல்லத்திற்கு ஒரு நேர பகல் உணவு அமரர் கந்தசாமி சண்முகம்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவு திதி நாளை முன்னிட்டு 08.12.2025 அன்று வழங்கி வைக்கப்பட்டது.

‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக நல்லுள்ளங்கள் பயனுள்ள வகையில் பயனாளிகளை சென்றடையும் வகையில் தமது அன்புக்கினியவர்களின் நினைவு நாட்கள், பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது நற்காரியங்கள் பலவற்றையும் நிறைவேற்றி வருகின்றார்கள். நேரடி தொடர்புகள் ஊடாகவும் செயற்பாடுகளின் பயன் அறிந்தும் 100% அவர்கள் வளங்கும் உதவிகள் அவர்களது பெயராலேயே உரியவர்களை சென்றடைகின்றது.




