Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர் விஸ்தீரனமான ஒரு விவசாய பண்ணை வீட்டில் வசித்துவரும் காரை மண்ணின் மைந்தன் ‘முழக்கம் சிறி’ அவர்களின் பண்ணை வீட்டில் 20.06.2026 இன்று சனிக்கிழமை நடைபெற்ற ‘பறை திருவிழாவில்’ பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள்.

காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்ற நிகழ்வில் 3 மணிக்கு பின்னர் கலந்து கொண்ட போதிலும் பறை வாத்திய கருவி பற்றி பல விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

தமிழர்களின் முதல் வாத்திய கருவி ‘பறை’.

பிறப்பு முதல் இறப்பு வரை பிரதான அங்கம் வகித்த பறை வாத்தியம் தற்போது மரண வீட்டில் மட்டும் வாசிக்கும் இசைக்கருவியாக மருவி வந்தது எப்படி..!

வரலாறுகள் மூலம் நிலைத்து நிற்கும் பறை வாத்திய கருவி மீண்டும் தமிழர்களின் பிரதான வாத்திய கருவியாக வரவேண்டும் அதன் இசையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்த ‘பறை திருவிழா’ நல்லதொரு முயற்சி.

இந்நிகழ்வில் ஈழத்து கலைஞர்கள் மட்டுமே பங்குபற்றியிருந்தார்கள். அதில் ஈழத்து உணர்ச்சிப்பாடகர் ‘சாந்தன்’ அவர்களின் பெறாமகனும் கலந்து கொண்டு உணர்ச்சிப்பாடல்களை பாடி மகிழ்வித்தார். விழா நிறைவில் அவருடனும் ஏற்பாட்டாளர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டது ஏதோ நிறைய மனநிறைவை தருகிறது.

ஒரு சில பாடல்கள் எடுத்து வரப்பட்டுள்ளன. விரும்பினால் பார்வையிடலாம்.

Leave a Reply