காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான கீர்த்தியை கண்டு ஆனந்த பரவசம் அடையும் வகையில் வெளிநாடுகளில் இருந்தும் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

கனடாவில் இருந்தும் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் அடியவர்கள் செ்வதற்கு பயணத்தடையாக இருந்து வந்த ஈரான்/அமெரிக்க போர் சுமூகமான நிலமைக்கு நேற்றைய தினம் திரும்பியதையடுத்து பலரும் அவசரமவசரமாக விமானப்பயணங்களை திட்டமிடுகின்றனர்.

2011ம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் பின்னர் நாட்டில் நிலவிவரும் சாதாரண சூழ்நிலை காரணமாக பல்லாயிரக்கணக்கான சிவனடியார்களும், ஆண்டிகேணி ஐயன் பக்தர்களும் ஊர் திரும்புவார்கள் எனவும் கருதப்படுகிறது.

தற்போதைய கோயில் நிர்வாகம் சார்பாக அடாவடியாக பாலஸ்தாபனம் செய்தவர்களினால் கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிகளிற்கான நிதி வளங்கவோ அல்லது அதற்குரிய ஏற்பாடுகளையோ செய்ய தவறிய நிலையிலும், நித்திய பூசைக்கென நிரந்தர வைப்பில் இடப்பட்ட நிதியினை கோர்ட் செலவுகளிற்காக விரயம் செய்துள்ள நிலையிலும், கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிகளிற்காக நிதியினை காரைநகர் சிவனடியார்களும் ஆண்டிகேணி ஐயன் பக்தர்களும் கும்பாபிஷேகத்திற்கு முன்னர் தங்களால் இயன்றளவு வழங்கி கும்பாபிஷேக பெருவிழாவினை எவ்வித குறைகளும் இல்லாது நிறைவேற்றுவோமாக.

ஈழத்து சிதம்பரத்தின் திருப்பணிகள் பலவும் 2011ம் ஆண்டிற்கு பின்னர் தனிப்பட்ட அடியவர்கள் பலரது கைங்கரியத்தினால் நிறைவேற்றப்பட்டு நிர்வாகம் சாராத தனிநபர்கள் பலரது கொடைகளினாலும் 05.07.2026 அன்று கும்பாபிஷேகம் கைகூடி வந்துள்ளது. அந்த வகையில் 2011ம் ஆண்டிற்குப் பின்னர் தனிப்பட்ட அடியவர்களினால் நிறைவேற்றப்பட்ட திருப்பணிகள், கும்பாபிஷேகத்திற்கான பெரும்பாலான அனுசரணைகள் ஈழத்து சிதம்பர அடியவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ‘எனது ஊர் காரைநகர்’ எடுத்து வரவுள்ளது.

ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட நிதியுதவிகளை வழங்கி ஈழத்து சிதம்பரம் 05.07.2026 இல் நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கு உறுதுணை புரிந்த அடியவர்கள் விரும்பினால் ‘எனது ஊர் காரைநகர்’ இற்கு அறியத்தாருங்கள்.

கணக்கு வழக்கு இன்றி ‘நல்லூர் கலாச்சாரத்திற்கு’ இட்டுச்செல்வதாக நியாயம் கற்பித்து நிர்வாகத்தை பின்னின்று நடாத்துபவர்களினால் திட்டமிட்டு எங்களூர் சிவன் ஆலயத்தினை ஆதீனகர்த்தாக்களிடமிருந்து கைப்பற்றி தமது விருப்பு வெறுப்புகளிற்கு அமைய காரைநகர் கொடை வள்ளல்களை இருட்டடிப்பு செய்வதுடன் தமது பெயரை பதிக்க முயலும் ‘எச்சில் கையாலும் காகம் துரத்த முடியாத…’ என்ற வாக்கிற்கு அமைய செயற்பட்டு வரும் சிலரின் உண்மை நிலமைகளை வெளிக்கொணரவும் உங்கள் பெருந்தன்மையை விட்டுக்கொடுத்து விடாதீர்கள்.

எங்கள் ஊர் கோயில், எங்கள் ம்களின் நம்பிக்கை. நம்பிக்கையே கடவுள். கடவுள் தான் நம்பிக்கை.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

Leave a Reply