Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

அமரர் தம்பிப்பிள்ளை பொன்னம்பலம்|மறைவு: 08.09.2020

இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், இடைப்பிட்டி, காரைநகர்
மறைவு: 08.09.2020

கல்விப்பணியில் ஓய்வு காலத்திலும் ஓயாமல் செயற்பட்ட உன்னத புருஷர். இடம்பெயர்ந்த காலத்தில் இடர்களின் மத்தியிலும் ஆர்வமுடன் மாணவர்களின் கல்வியில் நாட்டமுடன் தனது பணிகளை தவறாது செய்துகொண்ட உத்தமர்.

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியகூடாது என்ற கொள்கையுடன் பெருமைக்காகவோ அன்றி பெயருக்காகவோ அல்லாது பேருவைகையுடன் செயற்பட்ட கல்வியாளன். அமைதியானவர், அன்பானவர், அனைவரையும் அரவணைத்து செல்லும் ஆசான் பொன்னம்பலம் மாஸ்ரர் இயற்கையெய்தினார் என்ற செய்தி கவலைகொள்ள வைத்தது.

அன்னாரது புனித ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருப்பாதங்களை சென்றடைய ‘எனது ஊர் காரைநகர்’ அபிமானிகள் சார்பாகவும், எனது தந்தையார் பொன்னையா திரவியநாதன் அவர்களின் கூடப்படித்த வகுப்பு தோழனின் மகனாகவும், அன்னாரது மகன் அருளழகன் அவர்களுடைய காரை இந்துவின் வகுப்பு நண்பனான தீசன் திரவியநாதன் ஆகிய எனதும் பிரார்த்தனைகள் உரித்தாகுக.

Leave a Reply