புலவர் பூரணம் ஏநாதிநாதன் அவர்களிற்கு கண்ணீர் மல்க ‘கல்வியாஞ்சலி’ செலுத்தும் 1973 மாணவர்கள்.- 05-Aug-2026

புலவர் பூரணம் ஏநாதிநாதன் அவர்களிற்கு கண்ணீர் மல்க ‘கல்வியாஞ்சலி’ செலுத்தும் 1973 மாணவர்கள்.

‘எனது ஊர் காரைநகர்’ karainews.com இன் மிகப்பெரும் ‘fan’.

எழுத்து பிழையாக இருந்தாலும் கருத்து பிழையாக இருந்தாலும் பார்த்ததும் முதலில் எடுத்து திருத்தச் சொல்பவர், காரை இந்துவில் எங்கள் வகுப்பின் இன்னொரு பிரிவின் வகுப்பு ஆசிரியை,

1980களில் காரை இந்துவில் கண்டிப்பான ஆசிரியைகளில் ஒருவர். ‘அடி நெருப்பு பின்னும்’ அந்தளவில் சமயமும் தமிழும் இவரிடம் கற்றவர்கள் இன்றும் மறவாது மனப்பாடமாக சொல்வார்கள்.

விளையாட்டு போட்டி காலங்களில் இவருடைய முதலாவது பாடத்தை விளையாட்டு பயிற்சிக்காக எவர் miss பண்ணினாலும் ‘படிப்பு முதலில்… அப்புறம் தான் விளையாட்டு..’ என தனது பாட நேரத்தை எவருக்கும் விட்டுக்கொடுக்காமல் கற்பித்தலில் அதிக நாட்டம் கொண்ட ஆசிரியை.

அன்று அடிக்கு பயந்தவர்கள் பின்னர் இவரிடம் படிக்கவில்லையே என்று ஏங்கியவர்கள் அதிகம். இவரிடம் படிக்கவில்லையே என்று ஏங்கியவர்களில் நானும் ஒருவன், ஆனால் எனது தாய் மாமனார் A.நடராசா காரை இந்துவின் அதிபராக இருந்த காலம் முதல் ஆசிரியையாக இருந்த காரணத்தால் என்னை நன்கு அறிந்தவர்.

2019இல் இலண்டனில் நேரில் சென்று சந்தித்தேன். பின்னர் 2023 இல் எங்கள் வகுப்பு ‘பொன்னகவை’ கொண்டாட்டத்தின் போது காரை மண்ணிற்கு வரவழைத்தோம் ஆனால் இறுதி நேரத்தில் சுகஜீனம் காரணமாக தவிர்த்துக்கொண்டார்.

முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் சிறிய தாயார்.

இறுதியாக சில மாதங்கள் முன்னர் என்னுடன் vedio call மூலம் உரையாடிய போது ‘கவனமாக இருக்கச் சொன்னார்’…. ஏன் என்று கேட்டேன்…. ‘துணிவோடு பல விடயங்களை சொல்லுகிறீர் ஆனால் அதை மற்றையவர்கள் ஏற்றுக்கொள்வார்களோ தெரியாது அதனால் கவனமாக இருக்கச்சொன்னார்.(இவன்கள் என்னவும் செய்வார்கள் என்றும் சொன்னார்..)

‘உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீயே நீதிபதி..’ என்பதற்கு இணங்க எனது சொல்லும் எனது கருத்தும் ‘புலவர் பூரணம் ஏனாதிநாதன்’ அவர்களும் பார்வையிட்டு வருகிறார்கள் என்பதும் என்னை வழி நடாத்தியவர்களில் ஆசிரியை ‘பூரணம்’ ரீச்சரும் ஒருவர் என்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய மனசார பிரார்த்திக்கிறேன்.

என்றும் மறவாத அன்புடன் கண்ணீருடன்

பிரமேந்திரதீசன் திரவியநாதன்.

More From Author

முழுமையான விளம்பர அனுசரணை: பறையகண்டியில் தனித்துவமான அடையாளத்துடன் ‘சாந்தன் கடை’.

காரைநகர் கல்வி சமுதாயத்திற்கு ஓரளவு மகிழ்ச்சிகரமான செய்தி. காரைநகர் இந்துக்கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரிகளில் இருந்து தலா பத்து மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: karainewstheesan@gmail.com / theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Recent Posts

Archive

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Recent Comments

No comments to show.