யாழ்ற்ரன் கல்லூரியின் புதிய
அதிபராக திரு.வே.முருகமூர்த்தி
யாழ்ற்ரன் கல்லூரியின் புதிய அதிபராக காரைநகர் சடையாளியை பிறப்பிடமாகவும் முன்னாள் காரைநகர் இந்துக்கல்லூரி கணிதபாட ஆசிரியருமான வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்கள் 2011 September 7ம் திகதி முதல் பதவியேற்றுக்கொண்டார்.
காரைநகர் சடையாளியைச் சேர்ந்த ஆசிரியரான வேலுப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புதல்வாரன முருகமூர்த்தி அவர்கள் தனது ஆரம்பக்கல்வியை
சடையாளிப்பள்ளிக்கூடத்தில் (வலந்தலை வடக்கு அ.மி.த.க) பயின்றார். பின்னர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கற்ற இவர் பேராதனைப்பல்கலைக்கழக கணிதப்
பட்டதாரியாவார்.
பட்டப்பின் கல்வி டிப்ளோமாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமாவை தேசிய கல்வி நிறுவனத்திலும் பெற்றார். கிளிநொச்சி வன்னேரிக்குளம் மகாவித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்ற இவர் காரைநகர் இந்துக்கல்லூரியில் 10 ஆண்டுகள் கணித ஆசிரியராக கடமையாற்றினார். இக்கல்லூரியில் கற்பிக்கும்போது மாணவர்களுக்கு கல்விபுகட்டுவதில் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு காரைநகர் மாணவர்களிடையே நன்மதிப்பை பெற்
றவர். காரைநகர் இந்துக்கல்லூரியின் அபிவிருத்தி வேலைகளை பாடசாலை அபிவிருத்திச்சபையின்பொருளாளராக இருந்து திறம்பட நடத்திச்சென்றார் என்
பதும் குறிப்பிடத்தக்கது. பரீட்சைகளை சிறப்புற ஒழுங்கு செய்து மிகவும் கட்டுப்பாட்டுடன் நடத்தி வந்தார். ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் மடாலய அன்னதான
சபையின் பொருளாளராகவும் பல வருடங்கள் பணியாற்றியுள்ளார்.

1991ம் ஆண்ட அதிபர் தரத்தை பெற்றார். இவர் பின்னர் யாழ்ற்ரன் கல்லூரியின் பிரதி அதிபராக 1993 யூன் முதல் 1995 டிசம்பர் வரையான காலப்பகுதியில் கடமையாற்றியிருந்தார். பின்னர் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கனிஷ்ட பாடசாலை அதிபராக 1996 ஜனவரி முதல் 2004 மார்ச் வரை கடமையாற்றினார். அதன் பின்னர் கொழும்பு-13 புனித அந்தோனியார் ஆண்கள் மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபராக 2004 மார்ச் முதல் 2011 ஆகஸ்ட் வரை 7½ வருடகாலம் திறம்பட சேவையாற்றி வந்தார். இன்று காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் அதிபராக பொறுப்
பேற்றிருக்கும் இவரின் தந்தையார் வேலுப்பிள்ளைஆசிரியர் அவர்கள் இக்கல்லூரியில் 10 ஆண்டுகள் (1953-1963) கற்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அதிபராக பதவியேற்றுள்ள வே.முருகமூரத்தி அவர்களிற்கு வாழ்த்துக்களை ‘எனது ஊர் காரைநகர்”சார்பில் தெரிவித்துக்கொள்கின்றோம்.



