நாள் : Tuesday, August 25, 2026
--:--:--
👁️
Awareness

காரைநகர் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு திரு. குருபரன் சுப்பிரமணியம் வழிநடத்தும் நிலையான நற்பணி

காரைநகர் அபிவிருத்தி சபையின் தலைவராக பொதுச்சபையினால் தெரிவு செய்யப்பட்டு தனது பதவியினை சமூக நலன்கருதி விட்டுக்கொடுத்து சமுதாய பணியில் ஈடுபட்டுவரும் திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்கள் ஊடாக காரைநகரின் பின்தங்கிய பிரதேச மாணவர்கள் பலரும் கல்விக்கான தேவைகளை பெற்றுக்கொள்வதை ‘எனது ஊர் காரைநகர்’ உறுதி செய்து கொள்வதுடன், ஏற்கனவே திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்களது சிபார்சின் பெயரில் ‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் 50வது பிறந்தநாள் நிரந்தர வைப்பு 50 இலட்சம் நிதியத்தின் ஊடான வட்டிப் பணத்தின் ஊடாக கற்றலுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அத்துடன் சிவகெளரி முன்பள்ளி, அம்பாள் முன்பள்ளி ஆகியவற்றிற்கு அபிவிருத்தி சபை மாணவர் நூலக பயன்பாட்டினை முன்னிறுத்தி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ‘நம்பினால் கடவுள் அல்லது கல்’ என்பதற்கு ஏற்ப காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்தை பயன்படுத்தி வரும் மாணவர்களிற்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்தும் வழங்கப்படும்.

‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் 50வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது உறவினர்கள் ஊரவர்கள் கனடாவில் வழங்கிய 23,000 டொலர்கள் காரைநகர் மாணவர்களின் கல்வி வளர்சிக்காகவும், காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்தின் பாவனையை ஊக்குவிக்கும் பொருட்டும் அடுத்து வரும் பத்து ஆண்டுகளிற்கு அதன் வட்டிப்பணத்தை வழங்கும் முகமாக 2023ம் ஆண்டு நிரந்தர வைப்பில் ‘திரவியநாதன் பிரமேந்திரதீசன்’ பெயரில் இலங்கையில் வைப்பில் இடப்பட்டது. 14% வங்கி வட்டி அடிப்படையில் மாதம் ஒன்றிற்கு 60,000 ரூபாய்கள் வரையான வட்டிப்பணம் காரைநகரில் கல்வி வளர்ச்சிக்காகவும் அதனுடன் தேவையான விடயங்களிற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மாதம்தோறும் 30,000 ரூபாய்கள் வங்கி Standing order மூலமாக பயனாளிகளை சென்றடைகின்றது. மேலும் இன்றைய சிறுவர் கழக பொதுக்கூட்டத்தின் போது திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்தது போன்று தொடர்ந்து முன்பள்ளிகளிற்கும் காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்தை பயன்படுத்தி வரும் மாணவர்களிற்கும் மேற்படி வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டிப்பணம் வளங்கப்படும்.

2025ம் ஆண்டு அதிகூடியளவில் காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்தை பயன்படுத்திய 50 மாணவர்களிற்கு வருட முடிவில் கல்வி ஊக்குவிப்புற்காக நிதி வழங்கப்படவும், அதிகூடியளவில் தமது முன்பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்லும் முன்பள்ளிகளிற்கு தலா 25,000 ரூபாவும் வருட இறுதியில் வழங்கப்படும்.

திரு. குருபரன் சுப்பிரமணியம் அவர்களால் எது சொல்லப்படுகிறதோ அது உண்மை எனவும், திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்களால் எது செயற்படுத்தப்படுகினதோ அது நியாயமானதாக இருக்கும் என்பதனையும் ‘எனது ஊர் காரைநகர்’ கடந்த பத்து வருட அனுபவங்கள் ஊடாக புரிந்து கொள்ளப்பட்டவை.

சிறுவர் கழக பொதுக்கூட்டம் 2025

+++++++++++++++++++++++++++++

இன்றைய தினம் [10/12/2025 ] புதன்கிழமை மாலை 02.30 மணிக்கு காரை மேற்கு J/40 பிரிவிற்கான வருடாந்த சிறுவர் கழ பொதுக்கூட்டம் தங்கோடை கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சி.பகிதரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது வளவாளராக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.க.கமல்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறுவர்கள் தொடர்பான சட்டங்கள் மற்றும் உரிமைகள் ,பாதுகாப்புக்கள்,பாடசாலை இடைவிலகல்கள்,கல்வியின் முக்கியத்துவங்கள் தொடர்பான கருத்துக்களை வழங்கியிருந்தார். இந் நிகழ்வில் வலய உதவியாளர் ,சமூக செயற்பாட்டாளர்கள்,சிறுவர்கள்,முன்பள்ளி ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந் நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கான கற்றல் உபகரணம் Venkadeswara Express ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605