காரை இந்து கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டிகளை முன்னிட்டு நடைபெற்ற மரதன் ஓட்டம் மற்றும் சைக்கிள் ஓட்டம் – 2011.
நேற்று முன்தினம் ஜனவரி 3ம் திகதி மரதன் ஓட்டம், மற்றும் பெண்களுக்கான சைக்கிள் ஓட்டம் நடைபெற்றன. கடந்த காலங்களை நினைவூட்டும் வகையில் காரைநகர் பிரதான வீதி ஊடாக இப்போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன. மக்கள் ஆரவாரத்துடன் போட்டியாளர்களை காண காத்திருந்தனர்.












