பிரித்தானியா வாழ் காரை அன்பரும், வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளருமான திரு. இந்திரன் நாகலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் காரைநகரில் உருவாக்கப்பட்ட ‘சக்தி இலவசக்கல்வி மேம்பாட்டு நிலையம்’ இன்று காரைநகரில் அனைத்து சேவைகளிலும் ஆச்சரியத்தக்க பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.








2020ம் ஆண்டுவரை பல கோடி ரூபாய்கள் மதிப்பில் பல நூற்றுக்கணக்கான பணிகளை ஆற்றிய சக்தி இலவசக்கல்வி மேம்பாட்டு நிலையம் தொடர்ந்து 2021ம் ஆண்டு மேற்கொண்டு இவ்வருட குறுகிய காலத்திலும் பல கோடி மதிப்பிலான பல நூற்றுக்கணக்கான பணிகளை முன்னெடுத்து நிறைவேற்றியுள்ளது. கொரோனா காலத்தில் காரைநகரில் அனைத்து பகுதிகளிலும் உதவிகள் தேவைப்படும் அனைவரும் ‘சக்தி’ யின் சேவையினை பெற்றுள்ளார்கள். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் மாத்திரம் அன்றி, கர்ப்பிணி தாய்மார்கள், முன்கள பணியாளர்கள், கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களென காரைநகரின் அனைத்து பகுதிகளிலும் தினம் தினம் நிவாரணங்கள், சமைத்த உணவுகள், மருந்துகளென தேவையறிந்து சேவையில் ஈடுபட்டுள்ளது ‘சக்தி’.
ஒவ்வொரு செயற்பாடுகளும் பல மில்லியன் ரூபா செலவில் செயற்படுத்தப்படுகின்றன. கொரோனா காலத்திலும் கல்வியிலும், காரை மக்களின் நலன்களில் அக்கறையும் கொண்டு பாடசாலைகளிற்கான அபிவிருத்தி பணிகள், முன்பள்ளிகளிற்கான அபிவிருத்தி பணிகள் என பலவித செயற்பாடுகள் பல மில்லியன் ரூபா செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
புலமைப்பரிசில் பரீட்சைகளிற்கான கருத்தரங்குகள், கற்றலுக்கு தேவையான நவீன உபகரணங்கள், நவீன வசதிகள் என நினைப்பதற்கு முதலே செயற்படுத்தி வரும் ‘சக்தி’ யின் செயற்பாடுகள் எண்ணிலடங்காதவை. நீத்தார் பணிகளிற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், காரைநகர் வடக்கு அந்தியேட்டி கிரியை மண்டபம் கோடி ரூபாய்கள் செலவில் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.
காரைநகர் எங்கும் இரவு நேரங்களில் வெளிச்சம் பெற அனைத்து பகுதிகளிற்கும் கட்டம் கட்டமாக தானியங்கி மின்விளக்குகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவற்றினை உரிய இடங்களில் பொருத்தியும் அரச பணிகளையும் எஞ்சிய வகையில் ‘சக்தி’யின் செயற்பாடுகள் காரைநகர் எங்கும் ‘சக்தி’ யின் சேவையே.





விளையாட்டுக்கழகங்களின் தேவையறிந்து கேட்பதற்கு முதலே, வாக்கு அளிப்பதற்கு முதலே வந்திறங்கும் சேவைகள். எங்கும் எதிலும் காரைநகரில் ‘சக்தி’. நினைத்து முடிப்பதற்குள் சக்தியின் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படுகின்றன. ஊரி அ.மி.த.க பாடசாலையில் அதிபர் காரியாலயம், அப்புத்துரை பள்ளிக்கூடத்தில் முன்பக்க மதிலுடன் கூடிய அலங்கார வளைவு, சுப்பிரமணியம் வித்தியாசாலையில் அலங்கார வளைவுடன் கூடிய முன்பக்க சுவர், சடையாளி பள்ளிக்கூட எல்லை மதில் அலங்கார வர்ணங்களுடன், சிவகௌரி முன்பள்ளியின் வகுப்பறை, கரப்பந்தாட்ட மைதானம், பேரம்பலம் முன்பள்ளி புனரமைப்பு என காரைநகரில் எந்த பகுதியானாலும் எந்த செயற்பாடானாலும் சக்தியின் சேவை.
கொரோனா காலத்திலும் காரணம் சொல்லாமல் கண்ணியத்துடனான சேவைகள். பல கோடி ரூபாய்கள் செலவில் தினம் தினம், வாராவாரம், மாதாமாதம் காரைநகரில் சக்தியின் சேவைகள். சிறந்த வழி நடாத்தல், திடமான நம்பிக்கை, ஊரிற்கான உன்னதமாக சேவை திரு.இந்திரன் நாகலிங்கம் அவர்களின் ஊர் பற்றும் அதற்கான செயற்பாடுகளும் காரைநகர் மக்கள் ஒவ்வொருவராலும் அறிந்து கொள்ளப்பட வேண்டியன. போற்றப்பட வேண்டியன, பின்பற்றப்பட வேண்டியன.
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என காரை மாதா புளகாங்கிதம் அடைகின்றாள்.
‘சக்தி’யின் ஒரு செயற்பாட்டை செய்தியாக வெளியிட நினைக்கின்ற வேளையில் மறுநாளே இன்னுமொரு செயற்பாடு என தினம் தினம் ஒவ்வொரு செயற்பாடுகள். ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளத்தில் காரைநகரில் ‘சக்தி’ யின் செயற்பாடுகள் மட்டுமே தினம் தினம் எடுத்து வரமுடியும். அந்தளவு ‘சக்தி’ யின் சேவைகள். திரு.இந்திரன் நாகலிங்கம் காரை மண்ணின் சேவையாளன். இந்த நூற்றாண்டின் தன்னிகரில்லா சேவையாளன்.
வாழ்க பல்லாண்டு, வாழ்த்துவோம் ஒன்றாக. 2021 இந்த வருடம் ‘சக்தி’ யினால் நிறைவேற்றப்பட்ட செயற்பாடுகளில் சில காட்சிகள் எடுத்து வரப்பட்டுள்ளன….!



