நினைத்தாலே முத்தி தரும் திருக்கோயிலாக விளங்கும் திருவண்ணாமலையில் அண்ணாமலையானாக ஒளியாகி வீற்றிருக்கும் சிவனை தரிசிக்க பெளர்ணமி நாள் மிகச்சிறந்த நாளாகையால் அவன் அழைக்க நாங்கள் செல்கிறோம். எல்லாம் அவன் செயல்.
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே




