பொங்கலோ பொங்கல்..
வீடு செழிக்க, நாடு செழிக்க, நல்ல உள்ளம் பொங்க
வீட்டு முற்றத்திற்கு விடியலை அழைத்து
வெள்ளி பாத்திரத்தில்
பால் நிரப்பி, பச்சரிசி சாதம் படையலுக்கு, பயற்றுடன் பயற்றங்காய், பொரியலும் அப்பளமும் எண்ணையில பொங்க, கத்தரிக்காய் வெள்ளைக்கறி, தயிருடன் நெய்யும் கலந்து பகலவனுக்கு படையலிட, பட்ட கண்ணுக்கு படப்பட வெடியும் போட நடுத்தெருவில் நாளையொரு பொங்கல்
நினைவோடு அண்ணாமலையான் சந்நிதியில் அடியவர்களோடு அவன் அடி தேடி மலையடிவாரத்தில்,
காரை மண்ணில் உதிக்கும் அதே சூரியன் ஊடாக அகக் கண்ணால் என் வீட்டை பார்த்திருப்பேன்.
பொங்கலோ பொங்கலென என்வீட்டில் பொங்கல்
வீடு செழிக்க, நாடு செழிக்க நடுத்தெருவில் நாளையொரு பொங்கல்…
அழையா விருந்தாளியாக ஆதவனும் வந்திருப்பான் உங்களோடு கரம் கொடுத்து…!









