காரைநகர் வலந்தலையில நூறு வீடுகளில் அடுப்பு எரிகிறது என்றால் புதுறோட் சந்தியில இருக்கிற ஒரு கடைமுதலாளியாலும், இன்னுமொரு நூறு வீடுகளில் அடுப்பு எரிகிறது என்றால் பறையகண்டி சந்தியில இருக்கிற இன்னொரு கடை உரிமையாளராலும் தான்…
அதனால பிரதேச சபை தேர்தலில் வரும் அதிரடி விளம்பரங்களை ஆராய்ந்து அறிந்து கொண்டு வோட்டு போட்டால் மட்டுமே உண்மை என்னவென்பதை அறிந்து கொள்ளலாம்.
புதுறோட்டிலையும், பறையகண்டியிலும்இருக்கிற இரண்டு முதலாளிகளின் கடையிலும் Gas சிலின்டர் விற்பனையாகிறது. வலந்தலை மக்கள் அடுப்பெரிக்க இங்கு தான் gas சிலிண்டர் வேண்டுகிறார்கள் என்பது தான் புரிந்து கொள்ளப்பட வேண்டிய உண்மை.
நீங்கள் வோட்டு போட வேண்டியவர்களை முகநூலில் தேடாதீர்கள். உங்களுடன் ஒன்றாக உங்கள் வட்டாரங்களிலேயே தான் வசித்து வருகிறார்கள். அவர்களின் கடந்த கால ஊரிற்கான பணி, உங்கள் வட்டாரத்திற்கான பணி என்னவென்பதை நீங்கள் தான் அறிவீர்கள். இதற்கு வெளிநாட்டு கம்பனிகள் உங்களிற்கு உத்தரவாதம் செய்ய வேண்டியதில்லை.
பிரதேச சபை தேர்தலில் கட்சிகளை கண்டு கொள்ளாதீர்கள், உங்களிற்கானவர்களை கண்டு கொள்ளுங்கள். உங்களிற்காக சொந்தமாக சிந்திக்கக்கூடியவர்களிற்கும் சொந்தமாக செயற்படக்கூடியவர்களிற்கும் வாக்களியுங்கள்.
இரண்டு மாதத்திற்கு முன்னர் ஊரைப்பற்றி, மக்களைல்பற்றி, மண்ணின் தேவைகளைப்பற்றி கவலைப்படாத ஒருவர் அல்லது தனது வட்டாரத்தில் ஒரு சிரமதானப்பணி நடைபெற்றாலோ அல்லது நடுத்தெருவில் பாதையை குறுக்கிட்டு கல்லொன்று இருந்தாலோ கண்டு கொள்ள முடியாத பலரையும் திடீரென பதவி ஆசை காட்டி வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார்கள். அதனை வரவேற்கிறோம். இனிமேலாவது அடுத்த பிரதேச சபை தேர்தலுக்கு முதல் அவர்கள் பொதுப்பணியையும் மக்களின் தேவைகளையும் கவனித்து முதலில் தம்மாலான பணியை செய்வார்கள் என நம்புவோம்.
அனுபவமும் திறமையும் தன்னம்பிக்கையுடன் சமுதாயத்திற்கு முகம் கொடுப்பவர்களிற்கு உங்கள் வாக்குகளை அளிப்பதன் மூலமே அவர்களால் உங்கள் வட்டாரத்தின் தேவைகளை பிரதேச சபை நிர்வாக அமர்வுகளில் பிரதிபலிப்பார்கள்.



